மத்திய பிரதேசத்தில் சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்துவதற்காக, அம்மாநில
கல்வித்துறை அதிகாரிகள் ராமேஸ்வரத்தில் முகாமிட்டு, முன்னாள் ஜனாதிபதி
அப்துல்காலம் படித்த, அரசு பள்ளியில் நடத்தப்படும், சமச்சீர் கல்வி முறை
குறித்து கேட்டறிந்தனர்.
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வியால், மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், புத்தகம், தனி அட்டையில் படம் விளக்கத்துடன், செயல்விளக்க பாட திட்டம் மாணவர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இந்தப் பாட முறையை, மத்திய பிரதேசம் துவக்க, நடுநிலைப் பள்ளியில் செயல்படுத்திட, அம்மாநில அரசு ஆலோசித்தது. அதன்படி, அம்மாநில அரசு ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி ஆராய்ச்சி துறையின் இயக்குனர் ஜாகித் ஜெயின், கூடுதல் இயக்குனர் ஓ.பி. சர்மா தலைமையில், 20 பேர் தமிழகம் வந்தனர்.
இதில் ஒரு குழுவினர், ராமேஸ்வரத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் படித்த, மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எண் 1ல், சமச்சீர் கல்வி செயல்முறை பாடங்களை கற்பிக்கும் முறை குறித்து ஆசிரியர்களிடமும் மற்றும் புரியும் திறன் குறித்து மாணவர்களிடமும் கேட்டறிந்தனர்.
இது குறித்து ம.பி., கல்விக்குழு உறுப்பினர் முகேஷ் மால்விக் கூறியதாவது: தமிழகத்தில் துவக்க, நடுநிலைப் பள்ளியில் அமல்படுத்தப்பட்ட, சமச்சீர் கல்வி மற்றும் படத்துடன், செயல்விளக்க கல்விமுறை குறித்து, ஆச்சரியப்பட வைக்கிறது.
இப்பாட முறை, மாணவர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது. மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்தில், இரு தினங்களாக ஆய்வு செய்தோம். இக்கல்வி முறையை, எங்கள் மாநில பள்ளிகளில் அமல்படுத்த, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம்" என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...