விரைவில் TNPSC தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனில் நடத்த திட்டம்:
ஆன்லைன் மூலம் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்த
திட்டமிட்டு, அதற்குரிய பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று
டி.என்.பி.எஸ்.சி., தலைவர் ஆர். நட்ராஜ் கூறியுள்ளார்.
திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி: டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டில்
சோதனை முறையில் 11 தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தியது. 10,000 முதல் 15,000
பேர் வரை தேர்வு எழுதினால் இத்தேர்வுகளை நடத்துவதில் பிரச்னையில்லை.
அதேநேரத்தில் தேர்வெழுத அதிகமானோர் விண்ணப்பிப்பதால் ஆன்லைன் மூலம்
தேர்வுகளை நடத்துவதற்குரிய கணினிகளை பெறுவதில் சிரமம் உள்ளது. எனவே, மாற்று
ஏற்பாடாக தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்துவது குறித்து ஐஐடி
பேராசிரியர்களுடன் கலந்தாலோசித்து, நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
குரூப் 2 தேர்வில் தேர்வு பெற்று நேர்காணல் முடித்த 1426 பேருக்கும்,
குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற 1400 பேருக்கும் இன்று பணி நியமன ஆணைகள்
வழங்கப்பட உள்ளன. இனி வரும் தேர்வுகள் மாற்றியமைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி
பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும்.ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட
உள்ளதால் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகும் வாய்ப்பு இனி இருக்காது
என்றார் நட்ராஜ்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...