10ம் வகுப்பு சமூக அறிவியல் மிக எளிமை: பலர் சதமடிக்க வாய்ப்பு:
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில், அனைத்து வினாக்களும் எளிதாக கேட்கப்பட்டிருந்ததால், சுமாராக படிக்கும் மாணவர்களும், 50 மதிப்பெண்ணிற்கு மேல் பெறலாம். நன்றாக படிக்கும் மாணவர்கள், "சென்டம்" பெற, அதிக வாய்ப்புள்ளது என, மாணவர்கள், ஆசிரியர் தெரிவித்தனர்.
மாணவர்கள் எளிதில் புரிந்து பதிலளிக்கும் வகையிலேயே, அனைத்து வினாக்களும் எளிமையாக கேட்கப்பட்டிருந்தன. பாட புத்தகத்தை முழுமையாக படித்திருந்தாலே போதும், 50 மதிப்பெண்கள் கண்டிப்பாக கிடைக்கும். குறிப்பாக, ஐந்து மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் எளிதாக இருந்தன.
இத்தேர்வில் அனைத்து வினாக்களும் எளிமையாக கேட்கப்பட்டிருந்தன. சுமாராக படிக்கும் மாணவர்களும், அதிக மதிப்பெண் பெறக்கூடும். காலக்கோடு, மேப் உள்ளிட்டவையும் எளிமையாக இருந்தது. எதிர்பார்த்ததை விட, தேர்வு மிக மிக எளிதாக இருந்தது, என்றார்








