10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.,15ம் தேதி துவக்கம்:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் விடைத்தாள்
திருத்தும் பணி ஏப்ரல் 15ம் தேதி முதல் துவங்கலாம் என்று தேர்வுத்துறை
உத்தரவிட்டுள்ளது.10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 27ம் தேதி துவங்கி, ஏப்ரல் 12ம்
தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும்
பணியை ஏப்ரல் 15 முதல் தொடங்கலாம் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுவரை நடைபெற்ற தேர்வுகளின் விடத்தாள் பாதுகாப்பாக
வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அவற்றை பாதுகாக்க தனி காவல் படை
நியமித்துள்ளதாகவும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.








