தனியார் பல்கலைகள் எண்ணிக்கை அதிகரிப்பு: அகில இந்திய அமைப்பு தலைவர் வரவேற்பு:
நாட்டில், மொத்தம் 661 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில், தனியார் பல்கலைகள் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது வரவேற்கத்தக்கது" என அகில இந்திய பல்கலைக்கழக அமைப்பின் தலைவர் பூரி தெரிவித்தார்.
கோவை காருண்யா பல்கலையில் நேற்று
துவங்கிய தெற்கு மண்டல பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் அகில இந்திய
பல்கலைக்கழக அமைப்பின் தலைவர் பூரி பேசியதாவது:
நம் நாட்டில், மொத்தம் 661 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில், தனியார்
பல்கலைகள் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது வரவேற்கத்தக்கது. ஒரு கோடியே 69
லட்சம்பேர் தற்போது உயர்கல்வி கற்கின்றனர். நம் நாட்டில் உயர்கல்வி
கற்பவர்களில் பலர், வேலைவாய்ப்பு பெற முடியாத நிலை உள்ளது. இதற்கு
கல்விமுறையில் மாற்றம் கொண்டு வரப்படாததே காரணம்.
இளநிலை பட்ட படிப்பின் போதே, வெளிநாடுகளில் உள்ளதை போல, வேலைவாய்ப்பு
சார்ந்த இதர பாடங்களையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். பள்ளிக்
கல்வித்துறை மேம்பாடுக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு
வரும் நிலையில், உயர்கல்வித்துறை கற்கும் மாணவர்களில் பலர், கணிதம்
உள்ளிட்ட பாடங்களில் அடிப்படை கூட தெரியாமல் உள்ளனர்.
நாட்டில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப அந்தந்த
மாநில அரசுகள் சரிவர நடவடிக்கை மேற்கொள்ளாதது, ஆசிய அளவில் சிறந்த 100
கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இந்தியா பின்தங்கியுள்ள காரணம் குறித்து
ஆராய்ச்சி மேற்கொள்ளாதது உள்ளிட்டவை உயர்கல்வித்துறையில் இந்தியா
பின்தங்கியுள்ளதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன. இவ்வாறு, பூரி
பேசினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...