ஆசிரியர்கள் தொழில் நுட்பத்தை கற்று பாடம் நடத்த வலியுறுத்தல்:
காரைக்குடி அமராவதி புதூர் ராஜராஜன் சி.பி.எஸ்.இ., பள்ளி ஆண்டு விழா நடந்தது. பாரதிதாசன் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் சுப்பையா தலைமை வகித்தார். முதல்வர் மதுபாலா வரவேற்றார். தொழில் வணிக கழக தலைவர் முத்து பழனியப்பன் பங்கேற்றனர்.
பெங்களூர் கேந்திரவித்யாலயா சங்க தன் மண்டல துணை கமிஷனர்
ராஜேஸ்வரி பேசுகையில், "இன்றைய மாணவர்கள் அறிவாற்றலோடு உள்ளனர். தகவல்
தொடர்பு, மீடியாக்களின் வளர்ச்சியால், ஆசிரியர்களை மட்டும் நம்பாமல்,
தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கற்பிக்க துவங்கினர். ஆசிரியர்கள் தொழில்
நுட்பத்தை கற்று கற்பிக்காவிடில், மாணவர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க
முடியாது.
சி.பி.எஸ்.இ., கல்வி முறை, மனப்பாடம் செய்து, ஒரே நாளில்
தேர்வெழுதும் முறை அல்ல. ஒவ்வொரு பருவத்திலும், அவரவர் திறமை வெளிக்
கொணரப்படுகிறது, என்றார்.
இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் பேசும்போது, "சமுதாய குற்றங்களை
குறைக்கும் வகையில், கல்வி முறை அமையவில்லை. வருங்காலத்தில்,
சமுதாயத்துக்கு பயன்படக்கூடிய நல்ல மனிதர்களை உருவாக்க கூடிய வகையில்,
கல்வி முறை அமைய வேண்டும்," என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...