ஈரோட்டில் அரசுப் பள்ளிகள் நடத்திய விழிப்புணர்வு பேரணி:
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம்
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அனைத்து வகைகளிலும் செயல்படத் தொடங்கியுள்ளன
அரசுப் பள்ளிகள். இதையொட்டி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை
அதிகரிக்கும் நோக்கில், பெற்றோருக்கான விழிப்புணர்வு பேரணியை ஈரோட்டை
சேர்ந்த அரசுப் பள்ளிகள் நடத்தியுள்ளன.
ஏழை, எளிய மக்களின், கல்வித் தாகத்தைப்
போக்குவதில் அரசுப் பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தனியார் கல்வி
நிறுவனங்களுக்கு நிகராக, கட்டமைப்பு, கற்பித்தல் என அனைத்து அம்சங்களிலும்
முன்னேற்றம் கண்டு வருகின்றன அரசுப் பள்ளிகள். ஈரோடு மாவட்டத்தில் அரசுப்
பள்ளியின் சார்பில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி
நடைபெற்றது. பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த அரசின் சார்பில்
மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்
இந்த பேரணியை நடத்தியதாக அரசுப்பள்ளிகளின் அதிகாரிகள் கூறுகின்றனர்.
தனியார் பள்ளிகளில் வழங்கப்படுவது
போன்று, கூடுதல் கற்பித்தல் நிகழ்ச்சிகள் தங்கள் பள்ளிகளில்
நடத்தப்படுவதால், சிறப்பாக பயின்று வருவதாக கூறுகின்றனர் மாணவர்கள்.
மேலும், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இணையாக
படைப்பாற்றலுடன் திகழ்வதற்கு ஏற்ற சிறந்த கல்வி தங்களுக்கு அரசுப்
பள்ளியிலும் கிடைப்பதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர்.
கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது அரசுப்
பள்ளிகளில் கல்வியின் தரம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்
ஆசிரியர்கள். மேலும், மாற்றுத் திறன் மாணவர்களும் சிறந்த கற்றல்
அனுபவத்தைப் பெற சிறப்பு ஊழியர்களை நியமித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும் என்றும்
ஆசிரியர்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர்.
தங்கள் குழந்தைகளின் கல்வித் தேவைகள்
பூர்த்தியாகும் இடங்களையே பெற்றோர்கள் நாடிச் செல்கின்றனர். தனியார்
பள்ளிகளில் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளும், அரசுப் பள்ளிகளிலும்
கிடைத்தால், மாணவர்கள் சேர்ந்து படிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வளர்களும்,
கல்வியாளர்களும் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...