மாணவர்களிடையே துப்பாக்கிக் கலாச்சாரம்; தேவை விழிப்புணர்வு!
சென்னையில் மாணவர்கள் துப்பாக்கியுடன் மோதிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மதுராவயலில் உள்ள பல்கலை., ஒன்றில் கம்ப்யூட்டர் அறிவியில் படித்து வரும் மாணவர்களில் மணீஷ் என்ற ஜார்க்கண்ட் மாணவருக்கும், பீகார் மாநிலத்தைச்சேர்ந்த ஆதித்யா என்பவருக்கும் இன்று திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் ஆதித்யா தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் தாக்கியதில் மணீஷ் காயமடைந்தார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் அறிந்த போலீசார்
ஆதித்யாவை கைது செய்து அவரிடம் கைத்துப்பாக்கி கிடைத்தது எப்படி என்பது
குறித்து விசாரித்து வருகின்றனர். காதல் தகராறு காரணமாக இந்த மோதல்
ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.