ஸ்டான்லி மருத்துவ கல்லூரி: 100 கூடுதல் இடங்களில் சேர்க்கைக்கு அனுமதி:
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின், 100 கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கும், மாணவர் சேர்க்கை நடத்த, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) ஒப்புதல் வழங்கி உள்ளது.சென்னை மருத்துவக் கல்லூரியின், அதிகரிக்கப்பட்ட, 85 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை நடத்த, நேற்று முன்தினம், எம்.சி.ஐ., அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின், 100 கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கும், மாணவர் சேர்க்கை நடத்த, நேற்று, எம்.சி.ஐ., இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.
இவ்விரு கல்லூரிகளின் முறையே, 165, 150 எம்.பி.பி.எஸ்., இடங்கள், முதல்
கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட்டுள்ள நிலையில், 185 கூடுதல் எம்.பி.பி.எஸ்.,
இடங்களும், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியின், 100
எம்.பி.பி.எஸ்., இடங்களும், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...