பிளஸ் 2, 10ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு:
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு காலாண்டுத் தேர்வுகள், மாநில அளவில், பொதுத்தேர்வாக, செப்., 10ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரை நடக்கின்றன. பிளஸ் 2 தேர்வுகள், 10 நாட்களும், 10ம் வகுப்பு தேர்வுகள், ஏழு நாட்களும் நடக்கின்றன. இத்தேர்வை, 19 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.
பொதுத்தேர்வு எழுதும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த ஆண்டில் இருந்து, காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளும், மாநில அளவில், பொதுத்தேர்வாக நடத்தப்படுகிறது. இரண்டாவது ஆண்டாக, இந்த ஆண்டும், காலாண்டுத் தேர்வு, மாநில அளவில், பொதுத் தேர்வாக நடக்கும் என, தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.
அதன்படி, பிளஸ் 2, காலாண்டுத் தேர்வுகள், செப்., 10ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரையும், 10ம் வகுப்பு தேர்வுகள், செப்., 12ல் துவங்கி, 20ம் தேதி வரையும் நடக்கின்றன. மார்ச், ஏப்ரலில் நடத்தப்படும் பொதுத் தேர்வைப் போலவே, இந்த தேர்வுகளும் நடக்கும் என்பதால், மாணவர்களுக்கு, இது, நல்ல பயிற்சியாக அமையும். பிளஸ் 2 தேர்வுகள், காலை, 10:15 மணிக்கு துவங்கி, 1:15க்கு முடியும். முன்னதாக, காலை, 10:00 மணி முதல், 10:10 வரையிலான, 10 நிமிடம், கேள்வித்தாளை படித்து, புரிந்துக்கொள்ள வழங்கப்படும்.
அடுத்த, ஐந்து நிமிடம், விடைத்தாளில், மாணவர் விவரங்களை பதிவு செய்ய வழங்கப்படும் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்விலும், முதல், 15 நிமிடம், மேற்கண்ட முறையில் அமல்படுத்தப்படும். விடை எழுதுவது, 10:15 மணிக்கு துவங்கி, 12:45 மணிக்கு முடிவடையும்.
பத்தாம் வகுப்பு தேர்வை, 11 லட்சம் மணவர்களும், பிளஸ் 2 தேர்வை, எட்டு லட்சம் மாணவர்களும் எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வெழுதும் மாணவர்களின் விவரங்கள், தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்த சரியான புள்ளி விவரம், செப்., இறுதிக்குள் தெரியும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...