அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்றி செயல்படும் பி.எட்., கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து:
அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்றி செயல்படுதல், அதிக கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட காரணங்களால், மூன்று பி.எட்., கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது; மேலும் மூன்று கல்லூரிகளின் அங்கீகாரம், ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 676 கல்வியியல் கல்லூரிகள், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகின்றன. புதிய கல்லூரிகளில் அடிப்படை
கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா, மாணவர்களிடம் இருந்து அதிக கட்டணம்
வசூலிக்கப்படுகிறதா என, தனியார் பி.எட்., கல்லூரிகளின் செயல்பாட்டை ஆய்வு
செய்ய, பல்கலைக்கழகம், குழுக்களை அமைத்துள்ளது. இக்குழுக்கள் அளிக்கும்
ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், விதிமீறி செயல்படும் கல்லூரிகள் மீது
நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இக்குழு, துணைவேந்தர் தலைமையில், 15 கல்லூரிகளை பார்வையிட்டது. இதில்,
அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் பெறப்பட்ட, மதுரை ராயல் கல்வியியல்
கல்லூரி, வேதாரண்யம் ராமச்சந்திரா மகளிர் கல்வியியல் கல்லூரி, சேலம்
கொங்குநாடு இருபாலர் கல்வியியல் கல்லூரி ஆகியவற்றின் அங்கீகாரம் ரத்து
செய்யப்பட்டது.
ஆய்வில், அடிப்படை கட்டமைப்பு வசதி இன்றி செயல்பட்ட கல்லூரிகள், அதிக
கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட காரணங்களால், கன்னியாகுமரி, திருப்பூர், கரூர்
உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள, மூன்று பி.எட்., கல்லூரிகளின் அங்கீகாரம்
ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...