பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.பில் / பி.எச்.டி., ஊக்க ஊதியம் தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் பிறபித்த Recovery ஆணைக்கு உயர்நீதிமன்ற கிளை இடைக்கால் தடை விதித்து உத்தரவு:
தொடக்க / பள்ளிக்கல்வித்துறையில் உள்ள நடுநிலை /
உயர் / மேல்நிலைப் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.பில்., /
பி.எச்.டி படித்தவர்களுக்கு இரண்டாம் ஊக்க ஊதியம் வழங்க அரசாணை எண்.18
நாள்.18.01.2013 மூலம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து பட்டதாரி
ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெற்று வந்தனர். பிறகு தமிழக அரசு 17.07.2013
அன்று இவ்வரசாணை தொடர்பான தெளிவுரையில் அரசாணை எண்.18 வழங்கிய நாள் முதல்
ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம் என்று தெளிவுரை வழங்கியது.
இதையடுத்து தலைமை ஆசிரியர்கள் பிறபித்த (Recovery) ஆணைக்கு எதிராக
தொடரப்பட்ட வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைக்காலத் தடை
பிறபித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த
ஆசிரியர்கள் திரு.ஜெயக்குமார் மற்றும் பிரகாசம் ஆகியோர் தலைமை ஆசிரியர்கள்
பிறபித்த (Recovery) ஆணைக்கு இத்தடை ஆணை பெற்றுள்ளனர்.







