உடற்பயிற்சி சுய மதிப்பை உயர்த்தும்:
உடற்பயிற்சி மாணவர்களின் சுயமதிப்பை உயர்த்தும்" என, தெரிவிக்கப்பட்டது. கோத்தகிரி காந்தி மைதானத்தில் குன்னூர் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு இடையே விளையாட்டு போட்டி நிறைவு விழா நடந்தது.
விழாவுக்கு, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட கல்வி அலுவலர் லட்சுமணன், போட்டியை துவக்கி வைத்து பேசுகையில், "பள்ளி மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்களது உடல் நலம் அவர்களது கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிகிறது. உடற்பயிற்சி உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குவதுடன், தசை வளர்ச்சிக்கும், உடல் தகுதிக்கும் உதவுவதுடன், சுயமதிப்பை உயர்த்தும்.
எனவே, மாணவர்கள் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு, பல்வேறு போட்டிகளில் பங்குபெறவேண்டும். இவற்றின் மூலம், தலைமைப் பண்பு, ஒற்றுமையுணர்வு, குழுவாக செயல்படுதல், புரிந்துணர்தல் மற்றும் ஆரோக்கியமான போட்டி ஆகியவற்றை வளர்க்கும்," என்றார்.
போட்டிகளில் பங்கேற்ற 55 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...