"தாய்மொழியை விட்டு எங்கோ செல்லும் இளைஞர்கள்"
"இன்றைய இளைஞர்கள் தாய்மொழியை விட்டு எங்கோ செல்வது வேதனையாக உள்ளது," என, எஸ்.ஆர்.எம். பல்கலை துணைவேந்தர் பொன்னவைக்கோ, ராஜபாளையம் மணிமேகலை மன்ற விழாவில் பேசினார்.மன்ற ஆண்டுவிழாவை முன்னிட்டு, சிறந்த தமிழ் நூல்களுக்கு விருது வழங்கும்விழாவில், அவர் பேசுகையில், "மன்றத்தினர் 55ஆண்டுகளாக தமிழ்சாதனை செய்கின்றனர். இங்கு விருது பெற்றவர்கள் 60 வயதை தாண்டியவர்கள். இவர்களை பாராட்ட இளைஞர்கள் இல்லை. இன்றைய இளைஞர்கள் தாய்மொழியை விட்டு எங்கோ செல்கின்றனர், என்பது வேதனையான ஒன்று. 2001ல் பாரிசில், அடுத்த நூற்றாண்டில் வாழும் மொழிகளின் பட்டியல் இருந்தது.
அதில் தமிழ் இடம் பெறவில்லை. ஒரு மொழி அறிவதற்கான காரணமாக அம்மொழியிலேயே கல்வி, ஆட்சி, வழிபாட்டு, தாய் விருப்பம் போன்றவை இருக்கவேண்டும். இங்கு மாறிவிட்டது. தமிழகத்தில் அரசு உத்தரவு எல்லாம் ஆங்கிலத்தில் உள்ளது. மெக்காலே கல்வி திட்டம், இன்றும் தொடர்கிறது. தற்போது, துவக்கப் பள்ளிகளிலும் ஆங்கிலம் புகுந்துவிட்டது. தமிழ் நூல்களை உலகமொழிகளுக்கு மொழி பெயர்க்கவேண்டும். மற்ற மொழிகளுக்கு, தமிழ் தான் தாய்மொழியாக உள்ளது," என்றார்.சிறுகதை, நாவல், கவிதை, சிறுவர் இலக்கியம், இலக்கிய ஆய்வு, மொழியாக்கம், அறிவியல், இலக்கிய சிற்றிதழ்கள் போன்றவற்றில் நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, விருதுகளை பொன்னவைக்கோ வழங்கினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...