வங்கிகளின் கடன் வட்டி விகிதம் 0.25% உயர்வு : ரிசர்வ் வங்கி அறிவிப்பு:
வங்கிகளின் கடன் வட்டியை 0.25% உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.மும்பையில் இன்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் நடந்த கூட்டத்துக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியானது.
மேலும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், சிஆர்ஆர் எனப்படும் ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் பராமரிக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதத்தில் மாற்றம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதமாகவே நீடிக்கும்.
வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி 0.25% உயர்ந்துள்ளது. இதனால், ரெப்போ எனப்படும் வங்கிக் கடன் வட்டி 7.5%ல் இருந்து 7.75% ஆக உயர்ந்துள்ளது. வங்கிகளின் கடன் வட்டி உயர்வால் வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதம் உயரும்.
எம்எஸ்எப் என்கிற தினசரி அடிப்படையிலான கடன் வட்டி 9 சதவீத்தில் இருந்து 8.75% சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.