வங்கிகளின் கடன் வட்டி விகிதம் 0.25% உயர்வு : ரிசர்வ் வங்கி அறிவிப்பு:
வங்கிகளின் கடன் வட்டியை 0.25% உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.மும்பையில் இன்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் நடந்த கூட்டத்துக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியானது.
மேலும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், சிஆர்ஆர் எனப்படும் ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் பராமரிக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதத்தில் மாற்றம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதமாகவே நீடிக்கும்.
வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி 0.25% உயர்ந்துள்ளது. இதனால், ரெப்போ எனப்படும் வங்கிக் கடன் வட்டி 7.5%ல் இருந்து 7.75% ஆக உயர்ந்துள்ளது. வங்கிகளின் கடன் வட்டி உயர்வால் வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதம் உயரும்.
எம்எஸ்எப் என்கிற தினசரி அடிப்படையிலான கடன் வட்டி 9 சதவீத்தில் இருந்து 8.75% சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...