10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் தோல்வி அதிகரிப்பு: மாற்றம் கேட்கும் தமிழாசிரியர்கள்:
மாநில அளவில் 10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் தோல்வி அதிகரிப்பை தடுக்க வினாத்தாளில் மாற்றம் தேவை" என, தமிழக தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.மாநில துணைத் தலைவர் இளங்கோ கூறியதாவது: "சமச்சீர் கல்வித் திட்டத்தில் பொதுத்தேர்வு தமிழ் பாடத்திற்காக வடிவமைத்த புதிய வினாத்தாள் கடினமாக உள்ளது. இதனால் தோல்வி விகிதம் அதிகரித்துள்ளது.
பழைய முறையில் ஏழு மதிப்பெண் நெடுவினாக்களில் செய்யுள், உரைநடை பகுதியில் நான்கு கேட்கப்பட்டு இரு வினாவிற்கு விடையளித்தால் போதும். புது முறையில் செய்யுள், உரைநடை பகுதியில் தலா இரு வினாக்கள் கேட்டு ஒரு வினாவிற்கு எட்டு மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வினாக்கள் குறைவால், விடையளிக்க திணறுகின்றனர்.
இரண்டாம் தாளில் பழைய முறைப்படி இலக்கணக் குறிப்பு, பகுபத உறுப்பிலக்கணம், பிரித்து எழுதுதல், பிழை திருத்தம், பிற மொழி சொற்களை நீக்குதல் என தனித்தனி தலைப்பில் இரண்டு மதிப்பெண் வினாக்கள் மூன்று இடம் பெறும். வாக்கிய மாற்றம் தலைப்பில் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ஏழு கேட்கப்படும். தற்போது இவை அனைத்தும் ஒரு மதிப்பெண் வினாக்களாக்கி 20 கேள்வியாக மாறியுள்ளன. சிலர் 10 வினாக்களுக்கு மட்டுமே விடையளிப்பதால் மதிப்பெண் குறைந்து தோல்வி அதிகரிக்கிறது.
புதிய வினாத்தாளில் மாற்றம் செய்து எளிமையாக்க வேண்டும். பிளஸ் 2 வில் தமிழ் பாடத்திற்கு "பேசுதல், கேட்டல் திறனுக்கு" 20 மதிப்பெண் அளிப்பது போல 10ம் வகுப்பிற்கும் வழங்க வேண்டும்." இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...