1,000 பேர்களை பணிக்கு தேர்வு செய்யக்கூடிய குரூப்–2 பி தேர்வு டி.என்.பி.எஸ்.சி. அடுத்த கட்டமாக அறிவிக்கிறது
1,000–க்கும் மேற்பட்டவர்களை பல்வேறு
துறைகளுக்கு தேர்வு செய்யக்கூடிய குரூப்–2 பி தேர்வு
அடுத்தகட்டமாக தமிழ்நாடுஅரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்
குரூப்–1 தேர்வு. குரூப்–2 தேர்வு, குரூப்–4 தேர்வு, மற்றும் அரசு துறைகளுக்கான என்ஜினீயர்களை தேர்ந்து எடுக்கும்
தேர்வுகள் உள்ளிட்ட பல தேர்வுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தி
வருகிறது.
குரூப்–1 மெயின் தேர்வு வருகிற 25, 26 மற்றும் 27 தேதிகளில் நடைபெறுகிறது.
குருப்–1 தேர்வில் வெற்றி பெறுபவர்கள் பலர் பணிபுரிந்து பின்னர் 10 வருடத்திற்குள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகி விடுவார்கள். முன்பை விட
இப்போது அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளையும் எழுத படித்த
இளைஞர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. காரணம் அந்த அளவுக்கு படித்து
முடித்தவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர்.
தற்போது குரூப்–2 இரண்டு வகைப்படும். குரூப்–2 என்பது
எழுத்துதேர்வுடன் நேர்முகத்தேர்வும் கொண்டது. நேர்முகத்தேர்வு இல்லாமல் எழுத்து
தேர்வின் மதிப்பெண்ணை வைத்து நியமிப்பது குரூப்–2 ஏ தேர்வு ஆகும். குரூப்–2 தேர்வுக்கு
முதல் நிலை தேர்வு டிசம்பர் மாதம் 1–ந்தேதி நடைபெற
உள்ளது.
பின்னர் மெயின்தேர்வு நடத்தப்பட்டு
அதில் வெற்றி பெற்றவர்கள் நேரடி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
1,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு
அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுவதும்
குரூப்–2 ஏ தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான
அறிவிப்பு வெளியிடப்படவில்லை. தற்போது துறைவாரியாக காலிப்பணியிடங்கள் விவரம்
சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,000
காலிப்பணியிடங்கள் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. இன்னும் முழுமையாக பணியிடங்கள்
சேகரிக்கப்படவில்லை.
அதாவது ஆயிரத்திற்கும் மேற்பட்ட
பணிகளுக்கான குரூப்–2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வர இன்னும்
ஒரு சில மாதங்கள் ஆகலாம். இந்த தேர்வு மூலம் 1,000 பேர்களுக்கு மேல் வேலை கிடைக்கும். இந்த அறிவிப்பு காலதாமதம்
ஆகுவதற்கு காரணம் ஏற்கனவே நடந்த குரூப்–2 தேர்வில்
இன்னும் 140 பேர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு
அதன் முடிவு வெளியிடப்பட இருக்கிறது. அதன் பின்னர் தான் குரூப்2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும். அதைத்தொடர்ந்து இந்த
வருடத்திற்கான குரூப்–1 தேர்வு அறிவிப்பு வெளியாகும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...