முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்ளுக்கான கூடுதல் பட்டியல் சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 5, 6-ஆம் தேதிகளில் நடைபெறும் ?
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
நியமனத்துக்காக 212 தேர்வர்கள் அடங்கியகூடுதல் பட்டியலை
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில்
வகுப்பு
வாரியாக ஒரே கட்-ஆஃப்மதிப்பெண் பெற்றவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு
அழைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதையடுத்து, மொத்தம் 212பேர் அடங்கிய பட்டியலை ஆசிரியர்தேர்வு
வாரியம் வியாழக்கிழமை இரவு வெளியிட்டது. இவர்கள் அனைவருக்கும் நவம்பர் 5,
6-ஆம் தேதிகளில் சென்னையில் சான்றிதழ்சரிபார்ப்பு
நடைபெறும் எனத் தெரிகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடம், நேரம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர்தேர்வு வாரியம்
அறிவித்துள்ளது.
2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. தமிழ் பாடம் தவிர மீதமுள்ள பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் 7-ஆம்தேதி வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களின் பட்டியல் அக்டோபர் 11-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகளை வெளியிடவும் உயர் நீதிமன்றமதுரை கிளை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...