- KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வு ரத்து 6 வாரத்துக்குள் மறுதேர்வு நடத்த, ஐகோர்ட்டு உத்தரவு:

முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வில் 150 கேள்விகளில் 47 கேள்விகள் எழுத்துப்பிழையுடன் இருந்ததால் அந்த பணிக்கான எழுத்துத்தேர்வை ரத்து செய்த மதுரை ஐகோர்ட்டு, 6 வாரத்துக்குள் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டுள்ளது.முதுகலை ஆசிரியர் பணிமதுரை கோ.புதூரைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வில் 150-ல் 47
கேள்விகளில் அச்சுப்பிழை இருந்தது. ‘பி’ சீரியல் கொண்ட கேள்வித்தாள்களில் மட்டுமே இந்த அச்சுப்பிழை இருந்தது. எனவே, அச்சுப்பிழையுடன் கூடிய கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும். இந்த கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை மட்டும் வெளியிட தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.தடைஇதே போன்று திருச்சி மணப்பாறையை சேர்ந்த ஆண்டனிகிளாரா என்பவரும் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு, முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்தது. இந்த தடையை நீக்கக்கோரி மதுரையை சேர்ந்த மகாராஜன், அன்புதவமணி, சிவகங்கையை சேர்ந்த பாலமுருகன், ராமநாதபுரத்தை சேர்ந்த சாந்தகுமார் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.மனுதாரர்கள் சார்பில் வக் கீல்கள் டி.லஜபதிராய், எஸ்.லூயிஸ், ஜெ.ஜெயக்குமரன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். தடையை நீக்கக்கோரி மனு தாக்கல் செய்தவர்கள் சார்பில் வக்கீல் தாளைமுத்தரசு, ஆஜராகி வாதாடினார். கருணை மதிப்பெண் வழங்கலாம் இதன்பின்பு, 47 கேள்விகள் எழுத்துப்பிழைகளுடன் உள்ளதால் மறுதேர்வு நடத்தலாமா என்பது குறித்து அரசின் முடிவை தெரிவிக்க நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் மறுதேர்வு நடத்துவது தொடர்பாக எந்த முடிவையும் அரசு கோர்ட்டில் தெரிவிக்கவில்லை. தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சோமையாஜி, “பி சீரியல் கொண்ட கேள்வித்தாளில் 47 கேள்விகளில் எழுத்துப்பிழை இருந்த போதிலும் 7 கேள்விகள் புரிந்து கொண்டு விடை அளிக்கும் வகையில் தான் உள்ளன. எனவே பி சீரியல் கேள்வித்தாள் மூலம் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண்ணாக 40 மதிப்பெண் வழங்கலாம் அல்லது 40 கேள்விகளை தவிர்த்து விட்டு 110 மதிப்பெண்களுக்கு எத்தனை மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி மதிப்பெண் என்பதை கணக்கிட்டு தேர்ச்சியை முடிவு செய்யலாம் அல்லது ஏ, பி, சி, டி போன்ற சீரியல் கொண்ட கேள்வித்தாள்கள் மூலம் தேர்வு எழுதியவர்களுக்கும் 110 மதிப்பெண்ணை அதிகபட்ச மதிப்பெண்ணாக வைத்து அதில் எத்தனை மதிப்பெண் எடுத்துள்ளார்கள் என்று கணக்கிட்டு தேர்ச்சியை முடிவு செய்யலாம்” என்று தெரிவித்தார். நீதிபதி தீர்ப்பு இதை ஏற்க மறுத்த நீதிபதி எஸ்.நாகமுத்து, நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறினார். தீர்ப்பில் நீதிபதி கூறி இருப்பதாவது:-“தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ள கருத்தை ஏற்றுக்கொண்டு, அதை செயல்படுத்த உத்தரவிட்டால் தேர்வு எழுதியவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகி விடும். போட்டித்தேர்வு என்பது ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். எழுத்துப்பிழை உள்ள 40 கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டால் அந்த கேள்விகளுக்கு சரியான விடை அளிக்காதவர்களும் பலன் அடைந்து விடுவர். 110 மதிப்பெண்ணாக குறைத்து தேர்ச்சி விகிதத்தை முடிவு செய்யலாம் என்றால் தேர்வு நடத்தியதன் நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ள கருத்து தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல தீர்வை தராது. 6 வாரத்துக்குள் மறுதேர்வுஎனவே, முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்காக நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இதுபோன்ற ஒரு வழக்கில், எதிர்காலத்தில் எந்த தவறும் நடக்காது என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஐகோர்ட்டில் உறுதி அளித்தது. ஆனால் அதை ஆசிரியர் தேர்வு வாரியம் நிறைவேற்றவில்லை. இதன்காரணமாகவே மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டிய நிலைக்கு இந்த கோர்ட்டு தள்ளப்பட்டுள்ளது. மறுதேர்வு நடத்தினால் நிதி செலவு அதிகமாகும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி செலவு அதிகமாகும் என்பதற்காக தேர்வு எழுதியவர்கள் பாதிக்கப்படக்கூடாது. எனவே, எவ்வளவு விரைவில் தேர்வை நடத்த முடியுமோ அவ்வளவு விரைவில் தேர்வை நடத்த வேண்டும். 6 வாரத்துக்கு மேல் செல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். புதிதாக விண்ணப்பங்கள் பெறக்கூடாது. ஏற்கனவே தேர்வு எழுதியவர்கள் வைத்திருக்கும் ஹால் டிக்கெட் அடிப்படையில் அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.”இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H