மருத்துவ கல்லூரி பொது நுழைவு தேர்வை ரத்து செய்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது.மறு ஆய்வு மனுநாடு
முழுவதிலும் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும், எம்.பி.பி.எஸ்.,
பி.டி.எஸ். மற்றும் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான பொது நுழைவு
தேர்வை, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு
ரத்து செய்தது.இந்த
தீர்ப்பை மறு ஆய்வு செய்யும்படி கோரி, மத்திய அரசு மற்றும் மற்றும்
பல்வேறு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள், நீதிபதிகள் எச்.எல்.தத்து, ஏ.ஆர்.தவே, விக்ரம்ஜித்சென்
ஆகியோரை கொண்ட சுப்ரீம் கோர்ட்டு அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.நீதிபதிகள் அனுமதிஅந்த
தீர்ப்பை மறு பரிசீலனை செய்வதற்கு அனுமதி வழங்கிய நீதிபதிகள், அது
குறித்து அனைத்து தனியார் மற்றும் சிறுபான்மையோர் நிறுவன கல்லூரிகளுக்கு
(அவர்களுடைய கோரிக்கையின் பேரில்தான் பொது நுழைவுத்தேர்வு ரத்து
செய்யப்பட்டது.) நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.சுப்ரீம் கோர்ட்டின்
முன்னாள தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட
அமர்வு, கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி வழங்கிய தீர்ப்பில், பொது
நுழைவுத்தேர்வை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.பெரும்பான்மை தீர்ப்புஅப்போது
தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் மற்றும் நீதிபதி விக்ரம்ஜித் சென் இருவரும்
பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்ய ஆதரவாகவும், மற்றொரு நீதிபதியான
ஏ.ஆர்.தவே, பொது நுழைவுத்தேர்வுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து
இருந்தனர்.பொது நுழைவுத்தேர்வு நடத்தும் கொள்கை சட்டபூர்வமானது
என்றும், இதன் மூலம் தகுதியற்ற மாணவர்கள் பெரிய அளவில் நன்கொடைகள் மூலம்
மருத்துவ படிப்பில் சேருவதைதத் தடுக்க முடியும் என்றும், நீதிபதி தவே தனது
தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார். பெரும்பான்மை நீதிபதிகளின் முடிவுப்படி
(2-1) பொது நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.இந்த தீர்ப்பை மறு
பரிசீலனை செய்யக்கோரும் மனுக்களில் ஒன்றை, ‘சங்கல்ப்’ என்ற சமூக சேவை
நிறுவனம் தாக்கல் செய்து உள்ளது. அந்த மனுவில், பெரும்பான்மை நீதிபதிகளின்
தீர்ப்பு தவறு என்றும், பொது நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாக சொல்லப்பட்ட
தீர்ப்பே சரியானது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...