வாக்காளர் பட்டியலில் கல்லூரி மாணவர்களுக்கு முக்கியத்துவம்:
கல்லூரிகளில் பயிலும் தகுதியான மாணவர்களை வாக்காளர் பட்டியலில் அதிகமாக இடம் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக", வரைவு வாக்காளர் பட்டியல் மேலிட பார்வையாளர் சந்திரக்குமார் கூறினார்.
வரைவு வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர், முகவரி மாற்றம் குறித்து சிறப்பு முகாம் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நடக்கிறது. இந்த முகாம்களை கண்காணித்து, விரைந்து பட்டியல் தயாரித்து வெளியிடுவதற்கான பணியை துரிதப்படுத்துவதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் இன்று (அக்.27) ஆய்வு பணி நடக்கவிருந்த நிலையில் சிவகங்கை, ராமநாதபுரத்தில் மட்டும் முன்கூட்டியே நேற்று இந்த ஆய்வு நடந்தது. இம்மாவட்ட பார்வையாளரான சந்திரக்குமார் காரைக்குடி சட்டசபை தொகுதி முழுவதும் ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் சென்று பார்வையிட்டு பணியை துரிதப்படுத்த கேட்டுக் கொண்டார்.
அவர் கூறியதாவது: "பேரணி, போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர் போன்ற பிரசாரத்தால் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் வாக்காளர் திருத்த பணியில் மக்கள் விழிப்புடன் உள்ளனர். புதிதாக வேறு எந்தவித இலக்கும் நிர்ணயிக்கவில்லை.
கல்லூரிகளில் பயிலும் தகுதியான மாணவர்களை பட்டியலில் அதிகம் இடம் பெற செய்யும் நடவடிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்," என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...