இளைய சமுதாயம் தங்களது கடமைகளை உணர்ந்து பாடுபட வேண்டும்:
இளைய சமுதாயம் தங்களது கடமைகளை உணர்ந்து, நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும்," என, டி.என்.பி. எஸ்.சி., முன்னாள் தலைவர் நடராஜ் கூறினார்.
பொள்ளாச்சி ரோட்டரி ராயல்ஸ் சார்பில், வேட்டைக்காரன்புதூர்
முத்துமாணிக்கத்திற்கு "வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா"
பொள்ளாச்சியில் நடந்தது.
விழாவில் பங்கேற்ற டி.என்.பி.எஸ்.சி. முன்னாள் தலைவர்
நடராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: "வாழ்வில் எவ்வளவு பொறுப்புகள்
இருந்தாலும் தேசத்திற்காக நேரத்தை செலவழிக்க வேண்டும். காந்தியின்
வார்த்தைகளை பின்பற்றி கடமைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
நமது நாட்டில் 55 சதவீத இளைஞர்கள் வாக்காளர்களாக உள்ளனர்.
அதிக அளவு இளைஞர்களை உள்ளடக்கிய நாடு என்ற பெருமையும் பெற்றுள்ளது.
இளைஞர்கள் தங்களது கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும்; நாட்டின்
வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.
எந்த செயலையும் ஆர்வத்துடன் செய்தால் மட்டுமே, முழு அளவு
வெற்றி பெற முடியும். நமது நாடு பழமையான நாடு, இளமையான நாடு; நேர்மையாக
உழைத்தால் நாடு முன்னேறும். அனைவரும் நேர்மையாக உழைப்பதை தங்கள் நோக்கமாக
கொண்டு செயல்பட வேண்டும்" இவ்வாறு, நடராஜ் கூறினார்.