கல்விக் கடனுக்கு லஞ்சம் கேட்ட வங்கி மேலாளருக்கு சிறை:
கல்விக்கடன் வழங்க வேண்டுமானால் தனக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என அடம்பிடித்த சென்ட்ரல் பாங்க்., மேலாளர் ஒருவர் சி.பி.ஐ., போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான விவரம் வருமாறு: தேனி மாவட்டம் அம்மச்சியாபுரத்தை
சேர்ந்தவர் பாலுச்சாமி. இவரது மகள் நர்சிங் படிப்பதற்கென வங்கியில் லோன்
கேட்டு விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தின் மீது உரிய நடவடிக்கை
எடுக்காமல் காலம் தாழ்த்தினார் மேலாளர் முத்துக்குமார்.
இதற்கிடையில் கடன் கிடைக்க வேண்டுமானால் ரூ.15 ஆயிரம் லஞ்சம் தர
வேண்டும் என்றார். பேரம் பேசி ரூ.7 ஆயிரம் ஆனது. இதற்கு சம்மதித்த
பாலுச்சாமி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். இந்த புகாரை
சி.பி.ஐ.,க்கு பரிந்துரை செய்தனர்.
இதனையடுத்து பாலுச்சாமி பணத்தை ரத்னாநகரில் உள்ள மேலாளர் வீட்டு அருகே
கொண்டு கொடுக்க சென்றபோது, மறைந்திருந்த சி.பி.ஐ.,போலீசார் கையும் களவுமாக
பாங்க் மேலாளர் முத்துக்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து கோர்ட்டில்
ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் முத்துக்குமார் அடைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...