மன அழுத்தத்தை போக்கும் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்:
உதய மார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டு அரிய வகை பறவைகள் வரத்து அதிகரிக்கத் துவங்கி உள்ளது. மேலும், இப்பகுதியை அரசு சுற்றுலாத் தலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரிய வகை மரங்கள்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே 10 கி.மீ.,
தொலைவில் உதய மார்த்தாண்டபுரம் உள்ளது. இப்பகுதியில் வனத்துறைக்குச்
சொந்தமான 45.85 ஹெக்டர் பரப்பளவில் அடர்த்தியான கருவை, நாவல்,
கொடுக்காபுலி, நீர் மருது உள்ளிட்ட பலவகையான, அரியவகை மரங்கள் பச்சைப்
பசேலென அடர்த்தியாக உள்ளன.
இப்பகுதிக்கு, வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் பறவைகள்
வந்து இரை தேடிய பின் கூடு கட்டி முட்டையிட்டு தங்கள் இனத்தை இனவிருத்தி
செய்து மீண்டும் தாயகம் திரும்பும்.
தற்போது இந்த ஏரியில் வெள்ளை அரிவாள் மூக்கன், கறுப்பு
அரிவாள் மூக்கன், வக்கா, பெரிய நாராயண பட்சி, பாம்புதாரா, முக்குளிப்பான்,
கூழக் கிடா, பூநாரை, சாம்பல் நாரை, நத்தை கொத்தி, நாமத் தாரா, நாமக் கோழி,
மயில்கால் கோழி, பவளக்கால் உள்ளான், மாட்டுக்கொக்கு, வெண் கொக்கு, சிறவி
என, விதவிதமான அரியவகை பறவைகள் காணப்படுகின்றன.
வனத் துறை சார்பில், இப்பகுதியைப் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் பறவைகளை ரசிக்க வசதிகள் செய்யப்பட்டது.
குளிர்காலமான அக்டோபர் துவங்கி பிப்ரவரி வரை பறவைகள் சீசன்
என்பதால் காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பறவைகளைப் பார்க்க இலவசமாக
அனுமதிப்படுகிறது.
இரவு பகலாக பணி
இங்குள்ள, இயற்கை மரக்குகைகள் வழியாக உள்ளே செல்லும் போது, அரிய வகை மூலிகைகளின் மணத்தைச் சுவாசிப்பதால் மனஅழுத்தம் குறைகிறது.
தங்களை மறந்து பறவைகளை ரசிப்பதால், ரத்தம் மற்றும் மனஅழுத்தம் குறைவதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
பறவைகளின் எண்ணிக்கையைப் போன்று சுற்றுலா பயணிகள் கூட்டம்
அதிகரித்துள்ளது. தற்போது வனத்துறை ஊழியர்கள் மூவர் மட்டும் இரவு பகலாக
பணியாற்றி வருகின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...