புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக் கோரிக்கை:
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பாதிக்கும்
வகையில் மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட தன்பங்களிப்பு ஓய்வூதியத்
திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
என்று தமிழ்நாடு ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில
செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தாம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த செயற்குழுக்கூட்டத்தில்
மாநிலத்தலைவர் என். தாமரைக்கண்ணன், பொதுச்செயலாளர்
பி.சீத்தாராமன்,பொருளாளர் ஆர்.தர்மலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், டிஆர்பி மூலம் ஒரே நாளில் 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி
நியமனம் வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2006 முதல் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டு காலமுறை
ஊதியம் பெற்று வரும் 56 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தொகுப்பூதிய காலத்திற்கான
பணப்பலன்,பணிப்பலனை வழங்க கோரியும், தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும்
பட்டதாரி ஆசிரியர்களுக்கும் மாநில அளவில் மூதுரிமை வழங்க கோரியும்
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.