வங்கிகளிலிருந்து கடன் பெறும் இளைஞர்கள் எண்ணிக்கை உயர்வு : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Monday 24 March 2014

வங்கிகளிலிருந்து கடன் பெறும் இளைஞர்கள் எண்ணிக்கை உயர்வு :

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவுமும்பைவங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ‘சிபில்’ எனப்படும் கடன் தகவல் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரம் வாயிலாக தெரிய வந்துள்ளது.வேலைவாய்ப்புகடந்த 2008-ஆம் ஆண்டில் புதிதாக கடன் பெற விண்ணப்பித்தவர்களில் 30 வயதிற்கும் குறைவான இளைஞர்கள் எண்ணிக்கை 7 சதவீதமாக இருந்தது.
இது, தற்போது 25 சதவீதமாக உயர்ந்துள்ளது. பொருளாதார மந்தநிலையால் வேலைவாய்ப்பு சற்று குறைந்துள்ள நிலையில், கடன் பெறும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது பொருளியல் வல்லுனர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.கடந்த 2008-09-ஆம் நிதி ஆண்டிற்கு முன்பு வரையிலான மூன்று ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. தற்போது வளர்ச்சி 5 சதவீதத்திற்கும் கீழாக குறைந்துள்ளது.மக்கள் தொகைஇந்திய மக்கள் தொகையில் 15 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் எண்ணிக்கை அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. கடன் வாங்குபவர்களில் 40 வயதிற்கும் குறைவானவர்கள் எண்ணிக்கை அளவு 50 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.பொருளாதார வளர்ச்சி குறைந்து, தொழில்துறை மந்தமாக உள்ளது. இதன் காரணமாக திட்டங்களை செயல்படுத்துவதற்காக வங்கிகளிலிருந்து நிறுவனங்கள் பெறும் கடன் குறைந்துள்ளது. எனவே, வங்கிகளுக்கு வருவாயை அதிகரிப்பது ஒரு சவாலாக உள்ளது. இதன் காரணமாக வங்கிகள் தனிநபர் கடன் உள்ளிட்ட சில்லறை கடனை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன என்று சிபில் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு கடந்த 2000-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. கடன் வாங்கியவர்கள் அதனை உரிய காலத்திற்குள் ஒழுங்காக செலுத்துகின்றார்களா என்பது போன்ற விவரங்களை இந்த அமைப்பு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H