அப்பிழைகளை திருத்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாணவரின் விபரங்கள் தவறாக இருந்தால், முதன்மைக்கல்வி அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக விண்ணப்பம் தர தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அந்த விண்ணப்பம் தேர்வுத்துறை இயக்குனரகத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, பிழைகள் திருத்தப்படுகின்றன.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தேர்வுக்கு முன், மாணவர்களின் விபரங்கள் 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யப்பட்டன. அதில் சில பிழைகள் உள்ளன. அதை அப்படியே கொடுத்தால் குழப்பம் ஏற்படும். பிழைகளை சரி செய்து, மே 21ல், புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.