திருச்சி
பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைக் கல்வி மையத்தில்
எம்.எட். படிப்பை நடத்துவதற்கு
தென் மண்டலத்திற்கான தேசியக்கல்விக் குழுமம்
அனுமதி வழங்கியுள்ளது.இதைத் தொடர்ந்து 2014-15-ம் ஆண்டிற்கான முதுகலைக்
கல்வியியல் (எம்.எட்) படிப்புக்கான
மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.எம். முத்துக்குமார்
அண்மையில் தொடக்கி வைத்தார். இம்மாதம்
25-ம் தேதி வரை விண்ணப்பங்கள்
வழங்கப்படும் என்றும், இப்பிரிவில் 250 பேர் சேர்த்துக் கொள்ளப்படுவர்
என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள்
வழங்குதல் நிகழ்வில் பதிவாளர் ஏ.ராம்கணேஷ், தொலைக்கல்வி
மைய இயக்குநர் கே. ஆனந்தன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.