ஆசிரியர்
தகுதித் தேர்வு இரண்டாம் தாளில்
மொத்தம் 42 ஆயிரம் பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 11ஆயிரம் பேர் ஜூலைஇறுதியில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.ஆசிரியர்
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மீதமுள்ள 31 ஆயிரம்பேரின்
நிலை என்ன, அவர்களுக்கு அடுத்து
வரும் பணி நியமனங்களில் முன்னுரிமை
வழங்கப்படுமா என்பது தொடர்பாகஆசிரியர்தேர்வு வாரிய வட்டாரங்கள்
கூறியது:
ஆசிரியர்
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளிகளில்
பணி நியமனம் கிடைக்கப் பெறாதவர்கள்
தனியார் பள்ளிகளில் வேலைக்குச் செல்லலாம். அவர்களுக்கு அடுத்த ஆசிரியர் தகுதித்
தேர்வுகளில் தங்களது மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ளவும்,
ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவும் வாய்ப்பு
வழங்கப்படும். ஆனால்,அவர்களுக்கு அடுத்து
வரும் பணி நியமனங்களில் முன்னுரிமை
எதுவும் வழங்கப்படாது என அந்த வட்டாரங்கள்தெரிவித்தன