சுமார் 3 ஆயிரம்
பணியிடங்களை உள்ளடக்கிய குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை அடுத்த மாதம்
வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் (பொறுப்பு)
எஸ்.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:
கடந்த ஆண்டு
டிசம்பரில் நடைபெற்ற குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் அடுத்த 20
நாள்களுக்குள் வெளியிட விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும்,
குரூப் 4 பிரிவில் சுமார் 3 ஆயிரம் இடங்கள் காலியாகவுள்ளன. இந்தப்
பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு அறிவிக்கை அடுத்த மாதம்
வெளியாகும்.
உதவி கால்நடை
மருத்துவர் பதவியில் சுமார் 686 காலிப் பணியிடங்களுக்கு சிறப்பு தகுதித்
தேர்வுக்கான அறிவிக்கையும், சுமார் 315 காலியிடங்களுக்கு நேரடி
நியமனத்துக்கான அறிவிக்கையும் விரைவில் வெளியிடப்படும்.
உதவி பணி மேலாளர்
பதவி, 162 உரிமையியல் நீதிபதி பதவிக்கான அறிவிக்கைகளும் ஆகஸ்ட் மாதத்தில்
வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன என்று டி.என்.பி.எஸ்.சி.
தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...