தமிழகத்தில், கல்வி
பயில்வோர் அரசு வேலைக்காக, அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து
வருகின்றனர். ஆறு மாதத்திற்கு ஒரு முறை வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு
குறித்த விவரங்களை, வேலை வாய்ப்பு இயக்குனரகம் வெளியிட்டு வருகிறது.அதன்படி,
2014 ஜூன் மாதம் வரையிலான விவரங்கள் வெளியிட்டுள்ளது. இதன்படி,
தமிழகத்தில், 48.32 லட்சம் பெண்கள் உட்பட, மொத்தம். 94.58 லட்சம் பேர் வேலை
வாய்ப்புக்காக பதிவு செய்து, காத்திருக்கின்றனர். இதில், இடை நிலை
ஆசிரியர்கள் 2.30 லட்சம்; இன்ஜினியர்கள் 3.5 லட்சம்; டாக்டர்கள் 9,500;
முதுநிலை பட்டதாரிகள் 2.51 லட்சம்; பட்டதாரிகள் 3.76 லட்சம், விவசாய
படிப்புக்களை முடித்த, 4,640 பேரும் உள்ளனர்.
இதில், ஆதிதிராவிடர்
20 லட்சம்; அருந்ததியர் 2 லட்சம்; பழங்குடியினர் 68,615; மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் 24.28 லட்சம்; பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் 3.8
லட்சம், பிற்படுத்தப்பட்டோர் 40 லட்சம், இதர பிரிவினர், 3.5 லட்சம். கடந்த
ஆண்டு இறுதியில், வேலை வாய்ப்புக்கு பதிவு செய்திருந்தோரின் எண்ணிக்கை,
84.38 லட்சமாக இருந்தது. தற்போது, 10 லட்சம் பேர் வரை அதிகரித்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...