வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று இடைநிலை மற்றும் பட்டதாரி
ஆசிரியர்கள் கடந்த மாதம் 18ம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு
வருகின்றனர். சென்னையில் பல்வேறு அரசு அலுவலகங்களில் முற்றுகை போராட்டம்
நடத்திவரும் ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கு நேற்று சென்னை, மதுரை உயர்நீதி
மன்றங்களில் விசாரிக்கப்பட்டது.
இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் நுங்கம்
பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டிஆர்பி அலுவலகம் முன்பு உண்ணாவிரதம்
இருந்தனர். அப்போது அவர்கள் தங்கள் நெற்றியில் பட்டை நாமம் அணிந்து காட்சி
அளித்தனர்.








