நேற்று முன் தினம் கவன ஈர்ப்பு பேரணி நடத்திய போது, கடும் மன உளைச்சலில் இருந்த 4 பேர் பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதன்பின்பும், கல்வி துறையினர் இந்த விஷயத்தை பற்றி கவலைப்படாமல் அமைதி காப்பது சரியாக இருக்காது. மாணவர்களை நல்வழிப்படுத்தி வருங்கால சமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். அவர்களுக்கு எந்த ஒரு அரசும் எப்போதும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை ஆய்வு செய்ய அரசு முன் வர வேண்டும். அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்வதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனவே, போராட்டம் நடத்தும் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும்.
நேற்று முன் தினம் கவன ஈர்ப்பு பேரணி நடத்திய போது, கடும் மன உளைச்சலில் இருந்த 4 பேர் பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதன்பின்பும், கல்வி துறையினர் இந்த விஷயத்தை பற்றி கவலைப்படாமல் அமைதி காப்பது சரியாக இருக்காது. மாணவர்களை நல்வழிப்படுத்தி வருங்கால சமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். அவர்களுக்கு எந்த ஒரு அரசும் எப்போதும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை ஆய்வு செய்ய அரசு முன் வர வேண்டும். அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்வதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனவே, போராட்டம் நடத்தும் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும்.








