'குறிப்பிட்ட காலம்
பணிபுரிந்து, அரசு பணியை ராஜினாமா செய்தாலும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்'
என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. திண்டுக்கல் மங்களாபுரம் சுப்பையா,
78, தாக்கல் செய்த மனு:
பழநி அருகே, அரசு உதவி பெறும் பள்ளியில், 1955ல் ஆசிரியர் பணியில்
சேர்ந்தேன். பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராக பணி புரிந்தேன். குடும்ப
சூழ்நிலையால், 1972ல் ராஜினாமா செய்தேன்.
அப்போது, ஆசிரியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அமலில்
இல்லை. ஓய்வூதியத் திட்டம் அமலானது, எனக்கு தாமதமாகத் தெரிய வந்தது.
ஓய்வூதியம் கோரி, பள்ளிக் கல்வித் துறை செயலர், ஓய்வூதியத் துறை
இயக்குனருக்கு, 2008ல் விண்ணப்பித்தேன். ஓய்வூதியத்துறை இயக்குனர், 'அரசு
பணியை ராஜினாமா செய்தவர்களுக்கு, ஓய்வூதியம் வழங்க விதிகளில் இடமில்லை' என,
2013, ஏப்., 14ல் நிராகரித்தார். 'குறிப்பிட்ட காலம் வரை பணிபுரிந்து,
பின் ராஜினாமா செய்தால், ஓய்வூதியம் வழங்கலாம்' என, 1983ல் அரசு
உத்தரவிட்டது. நான், 17 ஆண்டுகள் பணி புரிந்துள்ளேன். அரசு உத்தரவுப்படி,
ஓய்வூதியம் பெற தகுதி உள்ளது. ஓய்வூதியத்துறை இயக்குனரின் உத்தரவை ரத்து
செய்ய வேண்டும். எனக்கு, 1972லிருந்து ஓய்வூதிய நிலுவைத் தொகை, மாத
ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
நீதிபதி கே.கே.சசிதரன் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் சாதிக் ராஜா ஆஜரானார்.
நீதிபதி பிறப்பித்த
உத்தரவில் கூறப்பட்டதாவது: குறிப்பிட்ட காலம் பணிபுரிந்து, பின் ராஜினாமா
செய்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கலாம் என, அரசு உத்தரவிட்டுள்ளது. மனுவை,
ஓய்வூதியத்துறை இயக்குனர் பரிசீலித்து, சட்டத்திற்குட்பட்டு தகுந்த உத்தரவு
பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...