பத்தாம் வகுப்பு
மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க
அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தனிநீதிபதி விசாரணைக்கு மாற்றி மதுரை
ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது.
ம.தி.மு.க., மாநில
மாணவரணி செயலாளர் ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. பல
இடங்களில் சம்பந்தப்பட்ட பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கின்றனர். வேறு
பள்ளிகளில் அமைக்கப்படும் தேர்வு மையங்களுக்கு பிற பள்ளிகளிலிருந்து
மாணவர்கள் 5 கி.மீ., தூரம் பயணம் செய்து தேர்வு எழுதுகின்றனர். மாணவர்கள்
சிரமம் இன்றி நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். அதிக தூரம் பயணம் செய்வதால்
மனநிலை பாதித்து விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. மாணவர்கள்
படிக்கும் பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க பள்ளிக் கல்வித்துறை
இயக்குனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என
குறிப்பிட்டார். நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி பெஞ்ச்
விசாரித்தது. மனுதாரர் வக்கீல் பி.சுப்பாராஜ் ஆஜரானார். நீதிபதிகள், 'இதை
பொதுநல மனுவாக கருத முடியாது. தனி நீதிபதி விசாரணைக்கு மாற்றப்படுகிறது,'
என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...