Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
டி.ஆர்.பி., தேர்வு பணிகள் ஆசிரியர்கள் புறக்கணிப்பு:
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் ஜன., 10ல்
நடக்கும் முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுப் பணிகளை
புறக்கணிப்பதாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். உயர்நிலை
மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்கமும் அரசுக்கு நிபந்தனை
விதித்துள்ளதால் தேர்வு நடத்துவதில் சிக்கல் உள்ளது.
மாநிலத்தில் 1307 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வை 400
மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். தேர்வு பணிகள்
ஒதுக்கீடு செய்வதில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், தலைமையாசிரியர் மற்றும்
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்குள் ஏற்பட்ட 'ஈகோ' கல்வித் துறையை
கலங்க வைத்துள்ளது. உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக மாநிலப்
பொதுச் செயலாளர் சாமிசத்தியமூர்த்தி கூறியதாவது: தேர்வு பணியில் முதன்மை
கண்காணிப்பாளர் பொறுப்பு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கு
வழங்கப்படுகிறது. துறை அலுவலர் மற்றம் கூடுதல் துறை அலுவலர் பொறுப்பை
நிர்வாக பொறுப்பிலுள்ள உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்க
வேண்டும். ஒவ்வொரு தேர்வின் போதும் இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது.
அதிகாரிகள் பேசி அப்போதைக்கு பிரச்னையை முடிக்கின்றனர். இதில் கல்வித்துறை
உரிய வழிகாட்ட வேண்டும். திருவண்ணாமலை, நாமக்கல் உட்பட சில மாவட்டங்களில்
முதன்மை கல்வி அலுவலர்களின் தவறான அணுகுமுறையால் தேர்வுப் பணி நியமனத்தில்
சில மாற்றங்கள் செய்து தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளனர். பள்ளி
கல்வியின் முக்கிய அங்கமான உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களின் கவுரவத்தை
காக்கும் வகையில் பணிகள் வழங்காவிட்டால் இனிவரும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2
மற்றும் ஆசிரியர் தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளையும் புறக்கணிப்போம்
என்றார்.
மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில அமைப்பு செயலாளர்
பிரபாகரன், மாவட்ட தலைவர் சரவணமுருகன் கூறியதாவது: பள்ளிக் கல்வி சார்பில்
நடத்தப்படும் தேர்வுகளில் முதன்மை மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர் பணி
மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கும், துறை அலுவலர்கள் பொறுப்பு உயர்
நிலைப் பள்ளி தலைமையாசிரியர், முதுகலை ஆசிரியர்களுக்கும், அறை
கண்காணிப்பாளர் முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஒதுக்கப்படும்.
இம்முறை துறை அலுவலர் பணியை உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு
மட்டும் ஒதுக்கி அதற்கு கீழ் உள்ள அறை கண்காணிப்பாளர் பணியை முதுகலை
ஆசிரியர்களுக்கு ஒதுக்கியுள்ளனர். உரிய 'கேடர்'படி பணிகள் ஒதுக்காததால்
டி.ஆர்.பி., தேர்வுப் பணிகளை புறக்கணிக்க உள்ளோம் என்றனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








