அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியில் 50 சதவீதத்தை
அடிப்படை ஊதியத்துடன் சேர்க்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்
வலியுறுத்தினார்.இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியில் 50
சதவீதத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும். புதிய ஓய்வூதியத்
திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த
வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்
சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தமிழகம் முழுவதும் போராட்டம்
நடத்தியுள்ளனர்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் இந்தக் கோரிக்கைகள்
நியாயமானவை. நிறைவேற்றப்பட வேண்டியவை. புதிய பொருளாதாரக் கொள்கைகளின்
நடைமுறையால் ஏழை மக்களின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்பட்டதோ, அதேபோல், அரசு
ஊழியர்களின் உரிமைகளும் பறிக்கப்பட்டன. அவ்வாறு பறிக்கப்பட்ட உரிமைகளில்
முதன்மையானது ஓய்வூதியம் பெரும் உரிமை ஆகும். பழைய ஓய்வூதியத்
திட்டத்தின்படி ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு அவர்களின் கடைசி வாழ்நாள் வரை
ஓய்வூதியமும், அவருக்குப் பின் அவரது வாழ்க்கைத் துணைக்கு குடும்ப
ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது.
இதன்மூலம், அரசு ஊழியர்கள் மட்டுமின்றி அவர்களின்
வாழ்க்கைத் துணைக்கும் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. ஆனால்,
புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி, அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம்
செய்யப்படும் பணம் எங்கு முதலீடு செய்யப்படுகிறது என்பதே தெரியவில்லை.
அதேபோல், அரசு ஊழியர்களின் அகவிலைப்படியின் அளவு 50
சதவீதத்தைத் தாண்டும் போது, அகவிலைப்படியில் 50 சதவீதம் அவர்களின் அடிப்படை
ஊதியத்தில் சேர்க்கப்படுவது மரபாக உள்ளது.
ஆனால், மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 113
சதவீதம் என்ற அளவை எட்டிவிட்ட பிறகும், அதில் 50 சதவீதத்தை அடிப்படை
ஊதியத்துடன் இணைக்க மத்திய, மாநில அரசுகள் தயங்குவது சரி இல்லை.
எனவே, அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு
நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச்
செயல்படுத்த வேண்டும்.
50 சதவீதம் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க
வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்
என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...