வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆதார் எண் கட்டாயம்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆதார் எண் கட்டாயம்:

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் சேர்க்கும் பணி மற்றும் 100 சதவீதம் திருத்தம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. மே மாதம் 31ம் தேதி வரை இந்த பணிகள் நடைபெறும். கண்டிப்பாக ஆதார் எண்ணை வழங்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். தேசிய அளவில் வாக்கா ளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிபடுத்தும் திட்டத்தை தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது. அதன்படி வாக் காளர் தேர்தல் ஆணையம் அனைத்து மாநிலங்களிலும் நேற்று முதல் விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கியுள்ளது. தமிழகத்திலும் இந்த திட்டத்தை அமல்படுத்தும் வகையில், அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தலைமை தாங்கினார்.
கூட்டம் முடிந்ததும் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நிருபர்களிடம் கூறியதாவது: தேசிய அளவில் வாக்கா ளர் பட்டியலை செம்மைபடுத்தும் திட்டம் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் இன்று துவங்கியுள்ளது. இதன் மூலம், வாக்காளர் அடையாள அட்டையில் பெயர், வயது, உறவினர் பெயர், முகவரி உள்ளிட்டவைகளில் தவறு இருந்தால் திருத்தம் செய்யலாம். மேலும், ஒரே வாக்காளரின் பெயர் இரண்டு இடங்களில் இருந்தால் தானாக முன் வந்து நீக்கம் செய்வது, பழைய புகைப்படங்களை நீக்கி விட்டு புதிய போட்டோவை இணைத்துக் கொள்ள வேண்டும். மேலும், ஆதார் எண், செல்போன், தொலைபேசி, இ-மெயில் முகவரியை சேர்க்க வேண்டும். இவை கட்டாயமாகும். இதற்கு அரசியல் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

ஏப்ரல் 12ம் தேதி முகாம் துவக்கம்: தமிழகம் முழுவதும் உள்ள 64 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் ஏப்ரல் 12ம் தேதி நடைபெறும். அதைத்தொடர்ந்து ஏப்ரல் 26, மே 10, மே 24 ஆகிய தேதிகளில் நடைபெறும். இந்த முகாமில் வாக்காளர்கள் நேரடியாக வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து திருத்தம் மற்றும் ஆதார் எண்களை பதிவு செய்து கொள்ளலாம். இதுபோன்ற திருத்தங்களை சிறப்பு முகாமில் உள்ள அதிகாரிகள் உடனடியாக சரி செய்து வழங்குவார்கள். இரட்டை பதிவை நீக்க படிவம்-7, பிழைகளை திருத்த படிவம்-8ஐ பயன்படுத்த வேண்டும். வீடு வீடாக படிவம்:  மே மாதம் வரை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக வந்தும் வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தம் மற்றும் ஆதார் எண் சேர்ப்பதற்கான படிவத்தை வழங் குவார்கள். அந்த படிவத்தை பொதுமக்கள் பூர்த்தி செய்து உடனடியாக அளித்தால் திருத்தம் மற்றும் ஆதார் எண் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு விடும். 51969 அறிமுகம்: தேர்தல் ஆணையம் சார்பில் இந்த செயல்பாடுகளுக்கு ‘51969‘ என்ற எண் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த எண்ணுக்கு செல்போன் மூலம் எஸ்எம்எஸ் அனுப்பி திருத்தம் மற்றும் ஆதார் எண் இணைக்கலாம். தேர்தல் கட்டுப்பாடு அலுவலகம்: சென்னையில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் உள்ள 1950 தொலைபேசி எண் மற்றும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகங்களில் உள்ள 1077 என்ற தொலைபேசி எண் மூலமும் தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம். தேர்தல் இணையதளம் மூலமும் புகைப்படம், திருத்தம் மற்றும் ஆதார் எண், தொலைபேசி எண்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் இன்று முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே மாதம் வரை திருத் தம்: இன்று முதல் மே மாதம் வரை திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியத்திற்கு மேல் அனைத்து தாலுகா அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் (ஆர்டிஓ) அலுவலகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலரிடம் பொதுமக்கள் விண்ணப்பம் அளிக்கலாம்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்: இந்த குழுவில் அரசியல் கட்சியை சாராத தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் உள்ளவர்கள் இடம்பெறுவார்கள். டிவி, வானொலி, போஸ்டர் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 5.5 கோடி வாக்காளர்கள்: தமிழகத்தில் உள்ள 5.5 கோடி வாக்காளர் பட்டியலில் 100 சதவீதம் தவறு இல்லாத நிலையை ஏற்படுத்தவும், அனைவரின் ஆதார் எண்ணை வாக்கா ளர் பட்டியலில் இணைக் கவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
போலிகள் ஒழிப்பு: ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைப்பதன் மூலம், ஒருவர் இரண்டு இடங்களில் பெயர் சேர்க்கும் முறையை முற்றிலும் ஒழிக்க முடியும். இதன்மூலம் 100 சதவீதம் குறைகளை சரி செய்து, சரியான வாக்காளர் பட்டியலை வெளியிட முடியும் என்று தேர்தல் ஆணையம் உறுதியாக நம்புகிறது. பொதுமக்கள், அரசியல் கட்சிகள், அரசு ஊழியர்கள் என அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தால் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடியும்.
இவ்வாறு சந்தீப் சக்சேனா கூறினார். இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் வழக்கறிஞர்கள் கிரிராஜன், பரந்தாமன் (திமுக), துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக), பார்த்திபன் எம்எல்ஏ, இளங்கோவன் (தேமுதிக), சக்கரவர்த்தி, ராகவன் (பாஜ), பாலசுப்பிரமணியன் (காங்கிரஸ்), செல்வசிங், ரமணி (மார்க்சிய கம்யூனிஸ்ட்), அழகிரிசாமி (இந்திய கம்யூனிஸ்ட்), ராஜசேகர், சாரதி (தேசியவாத காங்கிரஸ்) உள்ளிட்ட 9 அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


ஆதார் எண் கட்டாயம் ஏன்?தேர்தல் அதிகாரி விளக்கம்
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பதன் மூலம் ஒருவர் வேறு இடத்தில் டூப்ளிகட் அடையாள அட்டை வாங்க முடியாது. அதனால், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை தமிழகத்தில் உள்ள 5.5 கோடி வாக்காளர்களும் சேர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. ஆதார் எண் இல்லாதவர்களுக்கு, சிறப்பு முகாம்களை நடத்தி விரைவில் ஆதார் எண் வழங்கவும் தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளது. எஸ்எம்எஸ், இ-மெயில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட இன்டர்நெட் மையம், தொலைபேசி மற்றும் சிறப்பு முகாமுக்கு பொதுமக்கள் நேரில் வந்து ஆதார் எண், தொலைபேசி எண், இ-மெயில் முகவரியை வழங்க வேண்டும்.

இதுபோன்ற தகவல்களை வாக்காளர் பட்டியலில் இணைப்பதன் மூலம் தேர்தல் குறித்த அறிவிப்புகளை எளிதில் பொதுமக்களுக்கு தெரிவிக்க முடியும். இ-மெயில் முகவரி அல்லது செல்போன் மூலம் அனுப்பி வைக்கலாம். குடும்பத்தில் உள்ள ஒருவர் அவரது குடும்ப உறுப்பினர்களின் தகவல்களை நேரில் வந்து வழங்கலாம். புதிதாக பெயர் சேர்ப்பதாக இருந்தால் மட்டுமே, தேர்தல் அலுவலர்கள் வீட்டுக்கு வந்து உறுதி செய்து புதிய அடையாள அட்டை வழங்குவார்கள் என்று தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறினார்.

தொகுதிகளை சீரமைக்கும் திட்டம்
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, “சுலபமான பதிவு சுலபமான திருத்தம்‘ என்ற வாசகத்தை தேர்தல் ஆணையம் முன்னிலை படுத்தியது. அதன்படி, வரும் காலங்களில் வாக்காளர்கள் தாங்கள் இருக்கும் இடம் அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். அதன்படி, தொகுதிகளை சீரமைக்கும் திட்டம் அமல்படுத்தப்படும். முதல்கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி தொகுதியை, சாட்டிலைட் மூலம் படம் பிடித்து தொகுதி வரையறுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என்று தேர்தல் அதிகாரி கூறினார்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H