வாட்ஸ்அப்பில் வினாத்தாள் வெளியான விவகாரம் போலீஸ் காவல் முடிந்து ஆசிரியர்கள் சிறையிலடைப்பு: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


வாட்ஸ்அப்பில் வினாத்தாள் வெளியான விவகாரம் போலீஸ் காவல் முடிந்து ஆசிரியர்கள் சிறையிலடைப்பு:

ஓசூரில் பிளஸ்-2 கணக்கு வினாத்தாள் வாட்ஸ்  அப்பில் வெளியான சம்பவத்தில் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் உள்பட  மேலும் சிலர் கைதாகின்றனர். போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட 4  ஆசிரியர்களும் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட் டம், ஓசூரில் பிளஸ்-2 கணக்கு தேர்வின் போது வாட்ஸ்  அப்பில் வினாத் தாளை வெளியிட்டதாக ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி  ஆசிரியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பள்ளி நிர்வாகிகள்  உள்பட மேலும் பலருக்கு தொடர்பு உள்ளது. இது தொடர்பாக 2 நாள் பே £லீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த ஓசூர் குற்றவியல் நடுவர்  நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து கடந்த 24ம் தேதி மதியம் ந £ன்கு பேரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணைக்கு பின்னர் நேற்று மதியம் மீண்டும் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைதான ஆசிரியர்களிடம் வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.  இந்த  விசாரணை யில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இதில்  முறைகேடுக்கு உடந்தையாக இருக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு  நடத்தப்பட்ட பணப்பரிமாற்றம், உடந்தையாக இருந்த அரசு பள்ளி உடற்கல்வி  ஆசிரியர் மாது தொடர்பாகவும் பல்வேறு தகவல்களை 4 பேரும் வாக்குமூலமாக அளித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தற்போது கைது செய்யப்பட்ட 4  ஆசிரியர்கள் மட்டுமின்றி அதே பள்ளியை சேர்ந்த மேலும் சில ஆசிரியர்கள்,  பள்ளி நிர்வாகத்தினரின் தொடர்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 7  அல்லது 8 நபர்கள் கைது செய்ய வாய்ப்புள்ளதாக போலீஸ் வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன. இதில் முதல் கட்டமாக கூடுதல் தனிப்படைகள் அமைத்து தொடர்புடைய மற்ற  ஆசிரியர்களையும் கைது செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதையறிந்த அந்த ஆசிரியர்கள் தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
நெருக்கடியில் போலீசார்
வாட்ஸ் அப்பில் கணக்கு தாள் வெளியான சம்பவத்தால் மாணவி ஒருவர் மறு  தேர்வு நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  தற்போது நீதிமன்றத்திற்கும் இந்த விவகாரம் சென்று விட்டதால் முழுமையான  விசாரணை நடத்தி உண்மைகளை கண்டறியவேண்டிய கட்டாயம் ஏற்ப டுள்ளது. ஏப்ரல் 7ம் தேதி அந்த மனு விசாரணைக்கு வரவுள்ளது. அதற்குள்  விசாரணை நடத்தி அரசுக்கும் அறிக்கை தரவேண்டிய நிலை உருவாகியுள்ளது. தற்போது சட்டமன்ற கூட்டத் தொடர் நடந்து வருகிறது. அதில்  தனியார் பள்ளி முறைகேடு குறித்தும் எதிர்கட்சிகள் பேச வாய்ப்புள்ளதால்  முறைகேட்டில் ஈடுபட்டவர்களை விரைவில் கைது செய்யவேண்டிய கட்டாயம்  கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.DINAKARAN

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H