வேலூரில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி ஆசிரியர்கள் ஊர்வலம்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


வேலூரில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி ஆசிரியர்கள் ஊர்வலம்:

வேலூர்
ஆறாவது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மாநில அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வேலூரில் நேற்று ஆசிரியர் கூட்டமைப்பினர் ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊர்வலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இயங்கி வரும் 28 ஆசிரியர் இயக்கங்கள் ஒன்று சேர்ந்து தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ) என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

இந்த அமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் நேற்று பட்டதாரி ஆசிரியர்களின் ஊர்வலம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது, 6–வது ஊதியக்குழுவில் தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊதியம் போல் இணையாக வழங்க வேண்டும். மத்திய அரசின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கி உள்ள படிகள் போல், தமிழகத்தில் பணியாற்றம் ஆசிரியர்களுக்கு மாநில அரசு வழங்க வேண்டும்.
அகவிலைப்படி 100 சதவிதத்தை கடந்து விட்டதால், 50 சதவித அகவிலைப்படியை ஊதியத்துடன் இணைத்து வழங்கிட வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு தொடக்கப்பள்ளிகளை மூடும் நோக்கத்தை கைவிட்டு, அனைத்து பள்ளிகளும் செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடக்கப்பள்ளியிலிருந்து மேல்நிலை கல்வி வரை தாய்மொழிக்கல்வியை நடைமுறைபடுத்திட வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஊர்வலம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோவில் அருகே தொடங்கிய ஊர்வலம் கலெக்டர் அலுவலகம் அருகே முடிவடைந்தது. அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் தாண்டவராயன் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சி.சேகர் வாழ்த்தி பேசினார்.
15 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மாநில அரசும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கோஷமிட்டனர்.
முடிவில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் பக்தவச்சலம் நன்றி கூறினார்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H