தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனத் தேர்வில்அறிமுகப்படுத்தப்பட்டுள்ள‘வெயிட்டேஜ்’ முறையை எதிர்த்து தாக்கல்
செய்யப்பட்ட மனு மீதான இறுதி விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு 21-ந் தேதிக்கு
(செவ்வாய்க்கிழமை) ஒத்தி வைத்தது.ஆசிரியர் தேர்வு முறைக்கு எதிர்ப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘வெயிட்டேஜ்’
முறையை ரத்து செய்யுமாறு அந்த தேர்வில் பங்கேற்ற லாவண்யா உள்ளிட்டோர்
சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக
அரசின் சார்பில் வெளியிடப்பட்ட உத்தரவில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும்
அனைத்து பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கும், மேலும்
வெயிட்டேஜ் முறையும் பணி நியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பாதிப்பை
ஏற்படுத்தும்இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட
வழக்கில் தமிழக அரசின் முடிவு சரி என உத்தரவு பிறப்பித்தது. அதே நேரத்தில்
சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின்
முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாக
தெரிவிக்கப்பட்டிருந்தது.ஒரே வழக்கில் நீதிமன்றத்தின் இதுபோன்ற கருத்து
வேறுபாடு அச்சத்தைத் தருவதாக இருக்கிறது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு
தலையிட்டு இந்த வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க
வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அவகாசம் தேவையில்லை
இந்த
மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த மனுவின் மீதான
பதிலை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவு
பிறப்பித்தது.இந்நிலையில் இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள்
பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா மற்றும் கோபால கவுடா ஆகியோர் அடங்கிய
அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.தமிழக அரசு சார்பில் பதில் மனுவை தாக்கல்
செய்ய மேலும் 3 வாரங்கள் கால அவகாசம் கோரி கடிதம் தாக்கல்
செய்யப்பட்டிருந்தது. இதனை சுட்டிக் காட்டிய மனுதாரர் தரப்பு வக்கீல்கள்
நீதிபதிகளிடம் ‘சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு தற்போது தாக்கல்
செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களுக்கும் பொதுவானவை. மேலும் சுப்ரீம்
கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் ஒரே மாதிரியான
கோரிக்கையை முன்வைத்து இருப்பவை என்றும் அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக
பதிலளிக்க தமிழக அரசு சார்பில் அவகாசம் கோரத்தேவையில்லை என்றும்
சுட்டிக்காட்டினார்கள்.
இறுதி விசாரணை
இதனை ஏற்றுக் கொண்ட
நீதிபதிகள், இந்த வழக்கில் முதல் மனுதாரரின் மனுவின் மீது தமிழக அரசு
ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதுவே இந்த வழக்கு விசாரணையில்
தொடர்புடைய மற்ற அனைத்து மனுக்களுக்கும் பொருந்தும் என்றனர்.எனவே முதல்
மனுதாரரின் மனுவின் மீது தமிழக அரசு தாக்கல் செய்த பதிலையே இந்த வழக்கு
விசாரணை தொடர்புடைய மற்ற மனுக்களுக்கும் பதிலாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று
கூறிய நீதிபதிகள் இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணயை வரும் 21-ந்தேதிக்கு
ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...