10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Tuesday 21 April 2015
Home
EDNL NEWS
கற்பித்தலில் புதுமையை புகுத்தியதற்காக ,ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 4 அரசு பள்ளி ஆசிரியர்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தேர்வு செய்துள்ளது:
கற்பித்தலில் புதுமையை புகுத்தியதற்காக ,ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 4 அரசு பள்ளி ஆசிரியர்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தேர்வு செய்துள்ளது:
செய்தி பகிர்வு தே .தாமஸ்
ஆண்டனி
,ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளி நாதகவுண்டன் பாளையம் ,மொடக்குறிச்சி ஒன்றியம் .
கற்பித்தலில் புதுமையை புகுத்தியதற்காக ,ஈரோடு
மாவட்டத்தை சேர்ந்த 4 அரசு
பள்ளி
ஆசிரியர்களை மாநில
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தேர்வு
செய்துள்ளது .இவர்களது கற்பித்தல் முறைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யவும் ,மாநில
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முடிவு
செய்துள்ளது .அரசு
பள்ளிகளில் கற்பிக்கும் முறையை வித்யாசபடுத்தவும் ,ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கவும் ,பள்ளிக் கல்வித்துறையின் மாநில
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது .
தனியார் பள்ளிகளை விட
,அரசு
பள்ளிகளில் கற்பிக்கும் முறைகளை மேம்படுத்த, புதிய
முயற்சி ஒன்றை
,மாநில
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது .அதன்படி கற்பித்தலில் புதுமையை புகுத்தும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை ,மாநில
கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன
இணையதளத்தில் ,வீடியோவாக வெளியிட முடிவு
செய்யப்பட்டது .இதற்காக மாநிலம் முழுவதும் 1526 ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் முறைகளை விளக்கி ,மாநில
கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு விண்ணப்பித்தனர் .இதில்
கற்பித்தலில் புதுமையை புகுத்திய 100 ஆசிரியர்கள் தேர்வு
செய்யப்பட்டு ,முதற்கட்டமாக ,75 ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகளை வீடியோ
எடுக்கும் பணியானது நடைபெற்று வருகிறது .அவை
இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் .பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை இணையதளத்தில் பார்த்து மற்ற
ஆசிரியர்களும் பின்பற்ற வாய்ப்பு உள்ளது
என
மாநில
கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் நம்புகிறது .
ஈரோடு
மாவட்டத்தை பொறுத்தவரையில் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள
ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளி ,நாதகவுண்டன் பாளையம் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் தாமஸ்
ஆண்டனி
,பெருந்துறை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளி ,வீரணாம்பாளையம் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் மயில்சாமி ,பவானி
ஒன்றியத்தில் உள்ள
ஊராட்சி ஒன்றிய
தொடக்க
பள்ளி
,சின்னியம்பாளையம் ஆசிரியை சுதா
மற்றும் பவானி
ஒன்றியம் ,ஊராட்சி ஒன்றிய
தொடக்க
பள்ளி
இராமநாதபுரம் பள்ளி
ஆசிரியை வாசுகி
ஆகியோர் தேர்வு
செய்யப்பட்டு ,இவர்களது கற்பித்தல் முறைகள் குறித்து வீடியோ
பதிவு
செய்யப்பட்டுள்ளது .
ஆசிரியர்கள் பாடம்
நடத்தும் முறையை
நேரில்
பார்வையிட மாநில
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன
கல்வி
ஒளிபரப்பு நிகழ்ச்சிக்கான இயக்குனர் ஜெரோம்
தலைமையிலான குழுவினர் மேற்கண்ட பள்ளிகளுக்கு வருகை
புரிந்தனர் .இயக்குனர் ஜெரோம்
கூறுகையில் ,தமிழ்நாட்டில் தொடக்க
கல்வி
முதல்
மேல்நிலை கல்வி
முதல்
ஆசிரியர்கள் பலவிதமான கற்பித்தல் முறைகளில் ஈடுபடுகின்றனர் .இந்த
ஆண்டு
75 ஆசிரியர்களை தேர்வு
செய்து
அவர்களது கற்பித்தல் முறைகளில் கையாளும் புதுமைகளை ஒலி
,ஒளி
காட்சிகளாக படம்
பிடித்து பிற
ஆசிரியர்களுக்கும் இணையதளம் மூலம் கொண்டு
செல்கிறோம் .தொடர்ந்து இதுபோன்ற புதுமை
குறித்து மற்றவர்களுக்கு காண்பிக்க உள்ளோம் என்றார் .
இதுவரை
தமிழகத்தில் தேர்வு
செய்யப்பட்டுள்ள 75 ஆசிரியர்களில் 58 ஆசிரியர்களின் கற்பித்தல் முறையினை வீடியோவாக பதிவு
செய்யப்பட்டுள்ளதாகவும் ,இன்னும் ஓரிரு
வாரத்தில் மீதமுள்ள ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை
பதிவு
செய்து
முடிக்கப்படும் என
கல்வித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது .
கற்பித்தலில் புதுமையை புகுத்தியதாக தேர்வு
செய்யப்பட்டுள்ள ஈரோடு
மாவட்ட
ஆசிரியர்கள் .
1. தே .தாமஸ்
ஆண்டனி
,ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளி ,நாதகவுண்டன் பாளையம் ,மொடக்குறிச்சி ஒன்றியம் .
[ பொம்மலாட்ட வழிக்கல்வி ]
2.ப .மயில்சாமி , ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளி ,வீரணாம் பாளையம் ,பெருந்துறை ஒன்றியம் .
[ யோகாசன வழிக்கல்வி மூலமாக
மாணவர்களின் தேர்வு
வெற்றியை அதிகப்படுத்துதல் ]
3. ம .சுதா
,ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளி ,சின்னியம் பாளையம் ,பவானி
ஒன்றியம் .
[ பழைய செயல்வழிக் கற்றல்
அட்டை
மூலம்
வகுப்பறையை அழகுபடுத்துதல் மற்றும் கற்றல்
பயிற்சியை மேம்படுத்துதல் ]
4. அ .வாசுகி
,ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளி ,இராமநாதபுரம் ,பவானி
ஒன்றியம் .
[ வாழ்க்கை கல்வியை அனுபவ
பயிற்சி மூலம்
கற்பித்து மாணவர்களை உணரச்
செய்தல் ]
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
If anybody willing for mutual transfer from KRISHNAGIRI district to TIRUPUR Dt for BT social science.
ReplyDeleteplease contact : 9842256494