தனியார் பள்ளிக்கூடத்தில், கழிவறையை சுத்தம் செய்ய மாணவர்களை ஈடுபடுத்தியது
தொடர்பாக எழுந்த புகாரை தொடர்ந்து, 8 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
தனியார் பள்ளிக்கூடம்
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழப்பத்தை பண்டிதன்குறிச்சி கிராமத்தில், ஒரு தனியார் உயர்நிலை பள்ளிக்கூடம் உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூட கழிவறையை சுத்தம் செய்ய மாணவ-மாணவிகளை ஈடுபடுத்தியதாக ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதை கண்டித்து பள்ளிக்கூடம் முன்பு பெற்றோர்களும், கிராம மக்களும்
போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மாவட்ட கல்வி அதிகாரி ஜேக்கப் விசாரணை
நடத்தினார்.தனியார் பள்ளிக்கூடம்
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழப்பத்தை பண்டிதன்குறிச்சி கிராமத்தில், ஒரு தனியார் உயர்நிலை பள்ளிக்கூடம் உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூட கழிவறையை சுத்தம் செய்ய மாணவ-மாணவிகளை ஈடுபடுத்தியதாக ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
போலீசில் புகார்
வடகரையைச் சேர்ந்த கண்ணன் (வயது 48), ஹரிதாஸ் (45) ஆகியோர், பள்ளிக்கூட நிர்வாகம் மீதும், ஆசிரியர்கள் பற்றியும் களக்காடு போலீசில் புகார் அளித்தனர்.
புகாரில், தங்களுடைய மகன்களை கட்டாயப்படுத்தி, கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட வைத்துள்ளனர்.
அது குறித்து பெற்றோரிடம் கூறினால் தேர்வில் பெயில் ஆக்கி விடுவோம் என்று மகன்களை மிரட்டி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் மாணவ-மாணவிகளிடம் நேரில் விசாரணை நடத்தினர்.
8 ஆசிரியர்கள் கைது
இந்த பிரச்சினை தொடர்பாக பள்ளிக்கூட தாளாளரும், ஆசிரியருமான சாலமோன் ஜெபா (41), அவருடைய மனைவியும், தலைமை ஆசிரியையுமான ஜெயக்குமாரி (40), ஆசிரியைகள் சுஜித்ரா என்ற மேரி சுஜித்ரா (34), ஹெலன் அருள் எமிமாள் (56), ஏஞ்சலின் ஸ்டெபிகிராப் (29), ஆக்னஸ் (41), சரோஜா (48), ஏசுவடியான் பொன்னுத்துரை (40) ஆகிய 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அவர்கள் 8 பேரும் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மேலும் தலைமறைவாக இருந்துவரும் ஆசிரியைகள் கிருஷ்ணவேணி, வேலம்மாள் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜாமீனில் விடுவிப்பு
இதற்கிடையே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட தாளாளர், ஆசிரியர்கள் என 8 பேரும் கோர்ட்டு உத்தரவின் பேரில், சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...