அரசு உயர்நிலைப் பள்ளிகள்,
மேல்நிலைப் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை (ஏப். 23) முதல் கோடை விடுமுறை
விடப்படுகிறது. ஏப்ரல் 23 முதல் மே 31-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை
விடுமுறை ஆகும். விடுமுறைக்குப் பிறகு, ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள்
திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான
தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும்
மாணவர்களுக்கான மூன்றாம் பருவத் தேர்வுகள் இப்போது நடைபெற்று வருகின்றன.
பெரும்பாலான மாவட்டங்களில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை தேர்வுகள்
முடிவடைந்துவிட்டன. ஒரு சில மாவட்டங்களில் புதன்கிழமையோடு (ஏப். 22)
தேர்வுகள் நிறைவடைவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் தொடக்கப்
பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை செயல்படும். இந்தப்
பள்ளிகளுக்கு மே 1 முதல் 31-ஆம் தேதி வரை கோடை விடுமுறை வழங்கப்படுகிறது.
அதேபோல், சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கும் ஏப்ரல்
கடைசியிலிருந்து கோடை விடுமுறை வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...