ஆங்கிலேயர்களிடம் இருந்து, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு உப்பு
சத்யாகிரகம், ஒத்துழையாமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு போரட்டங்கள்
நடத்தப்பட்டன. இதில் முக்கியமானது "வெள்ளையனே வெளியேறு' போராட்டம். 1942
ஆக., 9ல் மகாத்மா காந்தி துவக்கிய இப்போராட்டத்தில், லட்சக்கணக்கான மக்கள்
திரண்டு ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதில் இறந்த
வீரர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் விதமாக இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
எப்படி உருவானது:
இரண்டாம்
உலகப்போர் 1939ல், பிரிட்டன், ஜெர்மனி இடையே மூண்டது. 1942ல் பிரிட்டன்
அரசு, கிரிப்ஸ் என்பவரின் தலைமையில் ஒரு குழுவை இந்தியாவுக்கு அனுப்பியது.
இவர்கள் காங்., தலைவர்களை சந்தித்து, உலகப்போரில் பிரிட்டனுக்கு
ஆதரவளித்தால் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதாக உறுதி அளித்தனர். தேசத்
தலைவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளாமல் நடுநிலைமை வகித்தனர்.
இந்நிகழ்வு, "கிரிப்ஸ் மிஷன்' என அழைக்கப்பட்டது.
1942 ஜூலை 14ல் காங்கிரஸ் மாநாட்டில், இந்தியாவுக்கு முழு சுதந்திரம் தேவை என தீர்மானம் நிறைவேற்றினர். இதை ஆங்கிலேயர் ஏற்கவில்லையெனில், "ஒத்துழையாமை இயக்கம்' என்பதை தொடங்கும் என அறிவித்தது. அதற்கு இது ஏற்ற நேரமல்ல எனக்கூறி ராஜாஜி உள்ளிட்ட சில தலைவர்கள் எதிர்த்தனர். இதனால் 1942 ஆக., 8ம் தேதி, மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், "வெள்ளையனே வெளியேறு' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் பேசிய மகாத்மா காந்தி, "செய் அல்லது செத்துமடி' என்ற கோஷத்துடன் போராட்டத்தை துவக்கி வைத்தார். இவரது இந்த வாசகம், மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியது. ஆக.9ம் தேதி வெள்ளுடை வீரர்களான காந்தி, நேரு, வல்லபாய் படேல் உள்ளிட்ட தலைவர்களை ஆங்கிலேயர் சிறை பிடித்தனர். இருப்பினும் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்தது.ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு பயப்படாமல் மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். அறவழியில் துவங்கிய இப்போராட்டம் வன்முறையாக மாறியது. லட்சக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இது ஆங்கிலேயர் மனதில், இனிமேலும் இந்தியாவை நாம் ஆள முடியாது என உணர வைத்தது. இதன் பின் ஐந்து ஆண்டுகள் கழித்து, இதே ஆகஸ்ட் மாதம் தான் இந்தியா சுதந்திர நாடாக உருவானது.
இந்நிகழ்வு, "கிரிப்ஸ் மிஷன்' என அழைக்கப்பட்டது.
1942 ஜூலை 14ல் காங்கிரஸ் மாநாட்டில், இந்தியாவுக்கு முழு சுதந்திரம் தேவை என தீர்மானம் நிறைவேற்றினர். இதை ஆங்கிலேயர் ஏற்கவில்லையெனில், "ஒத்துழையாமை இயக்கம்' என்பதை தொடங்கும் என அறிவித்தது. அதற்கு இது ஏற்ற நேரமல்ல எனக்கூறி ராஜாஜி உள்ளிட்ட சில தலைவர்கள் எதிர்த்தனர். இதனால் 1942 ஆக., 8ம் தேதி, மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், "வெள்ளையனே வெளியேறு' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் பேசிய மகாத்மா காந்தி, "செய் அல்லது செத்துமடி' என்ற கோஷத்துடன் போராட்டத்தை துவக்கி வைத்தார். இவரது இந்த வாசகம், மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியது. ஆக.9ம் தேதி வெள்ளுடை வீரர்களான காந்தி, நேரு, வல்லபாய் படேல் உள்ளிட்ட தலைவர்களை ஆங்கிலேயர் சிறை பிடித்தனர். இருப்பினும் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்தது.ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு பயப்படாமல் மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். அறவழியில் துவங்கிய இப்போராட்டம் வன்முறையாக மாறியது. லட்சக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இது ஆங்கிலேயர் மனதில், இனிமேலும் இந்தியாவை நாம் ஆள முடியாது என உணர வைத்தது. இதன் பின் ஐந்து ஆண்டுகள் கழித்து, இதே ஆகஸ்ட் மாதம் தான் இந்தியா சுதந்திர நாடாக உருவானது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...