கோவை, சுல்தான்பேட்டையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மல்லிகா தம்பதியின் ஒரே மகன் சங்கர சுப்ரமணியம், 29; பார்வை குன்றிய, கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளி; ஆனால், ஞாபக சக்தி உண்டு.இவரால், உருவங்களை, நிழலாக மட்டுமே காண முடியும். ஆனால், காதொலியை ஆழமாக மனதில் பதிய வைத்துக் கொள்ளும் அபார ஆற்றல் உள்ளது; நுட்பமான ஞாபக சக்தியும் உள்ளது.தன் குறைகளை, தெளிவாக புரிந்துகொண்ட சங்கர சுப்ரமணியம், மனதை திடப்படுத்தி, மீதமுள்ள நிறைகளை பயன்படுத்தி, வாழ்க்கையை புன்னகையுடன் எதிர்கொண்டு வருகிறார். பிறர் படிப்பதை கேட்டு, 'ஸ்கிரைப்' முறையில் தேர்வு எழுதி, 10ம் வகுப்பு தேர்வில், 62 சதவீத மதிப்பெண் பெற்றார்.
கோவை, சுல்தான்பேட்டையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மல்லிகா தம்பதியின் ஒரே மகன் சங்கர சுப்ரமணியம், 29; பார்வை குன்றிய, கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளி; ஆனால், ஞாபக சக்தி உண்டு.இவரால், உருவங்களை, நிழலாக மட்டுமே காண முடியும். ஆனால், காதொலியை ஆழமாக மனதில் பதிய வைத்துக் கொள்ளும் அபார ஆற்றல் உள்ளது; நுட்பமான ஞாபக சக்தியும் உள்ளது.தன் குறைகளை, தெளிவாக புரிந்துகொண்ட சங்கர சுப்ரமணியம், மனதை திடப்படுத்தி, மீதமுள்ள நிறைகளை பயன்படுத்தி, வாழ்க்கையை புன்னகையுடன் எதிர்கொண்டு வருகிறார். பிறர் படிப்பதை கேட்டு, 'ஸ்கிரைப்' முறையில் தேர்வு எழுதி, 10ம் வகுப்பு தேர்வில், 62 சதவீத மதிப்பெண் பெற்றார்.








