கல்விக்குரல் மனதார வாழ்த்துகிறது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலையின், 18வது பட்டமளிப்பு விழா, சென்னை,
வேப்பேரியில் உள்ள கல்லுாரி அரங்கில், நேற்று நடந்தது. பல்கலை வேந்தரான,
கவர்னர் ரோசய்யா, மாணவ -
மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.பட்டமளிப்பு விழா உரையில், மத்திய கால்நடை பராமரிப்பு ஆணையர் ஹோன்னப்பகோல் பேசியதாவது: பல காரணங்களால் விவசாயம் பொய்த்து போகும்போது, விவசாயிகளின் பணப் பற்றாக்குறையை போக்கும் இயற்கை வங்கிகளாக, கால்நடை வளர்ப்பு பயனளிக்கிறது. இந்தியாவில், 1970ல், 2.2 கோடி டன்னாக இருந்த பால் உற்பத்தி, தற்போது, 14.6 கோடி டன்னாக உயர்ந்து உள்ளது.காலத்திகேற்ப புதிய தொழில்நுட்ப அணுகுமுறைகள் அவசியம். கால்நடை துறையில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும், கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும். இதில் உள்ள சவால்களைச் சந்திக்கவும், உற்பத்தியை பெருக்கவும் நம்மிடம் நிறைய வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.
பல்கலை
துணை வேந்தர் திலகர், அறிக்கை சமர்ப்பித்து பேசியதாவது:* உலக அளவிலான
மாற்றம், முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, பல்கலைக்கான, 'தொலைநோக்குத்
திட்டம் - 2050' உருவாக்கப்படும்.மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.பட்டமளிப்பு விழா உரையில், மத்திய கால்நடை பராமரிப்பு ஆணையர் ஹோன்னப்பகோல் பேசியதாவது: பல காரணங்களால் விவசாயம் பொய்த்து போகும்போது, விவசாயிகளின் பணப் பற்றாக்குறையை போக்கும் இயற்கை வங்கிகளாக, கால்நடை வளர்ப்பு பயனளிக்கிறது. இந்தியாவில், 1970ல், 2.2 கோடி டன்னாக இருந்த பால் உற்பத்தி, தற்போது, 14.6 கோடி டன்னாக உயர்ந்து உள்ளது.காலத்திகேற்ப புதிய தொழில்நுட்ப அணுகுமுறைகள் அவசியம். கால்நடை துறையில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும், கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும். இதில் உள்ள சவால்களைச் சந்திக்கவும், உற்பத்தியை பெருக்கவும் நம்மிடம் நிறைய வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.
* கறவை மாடு, கோழி வளர்ப்பு, உணவு உற்பத்தி தொழில்கள் பெருகி வருவதால், ஆண்டுக்கு, திறன் மிக்க, 1,000 பணியாளர்கள் உருவாக்கப்படுவர்.
* பள்ளியில் இடை நின்ற மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, சுய வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
32 பதக்கங்களை குவித்த லாவண்யா!
கல்வி மற்றும் தனித்திறனில் சாதித்த மாணவர்களுக்கு, விருதுகள் வழங்கப்பட்டன. சேலம், மேட்டூரைச் சேர்ந்த, பி.வி.எஸ்சி., பட்டம் பெற்ற மாணவி, லாவண்யா, 32 பதக்கங்களை குவித்தார். மேடையில், பதக்கம், அதற்கான சான்றிதழ்களை துாக்க முடியாமல் திணறினார்.
அவரது தாய் ராதா, ஆனந்த கண்ணீருடன், பதக்க ஆவணங்களை துாக்கிச் சென்றார்.''எனக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம் இது. முதுநிலை படிப்பிலும் சாதிப்பேன்; சிறந்த கால்நடை மருத்துவ நிபுணர் ஆவேன்,'' என, லாவண்யா கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...