Best-Courses-and-Career-Options-After-Higher-Secondary. - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


Best-Courses-and-Career-Options-After-Higher-Secondary.

+2 க்கு பிறகு படிக்க டாப் 10 படிப்புகள்
டாப் 10 படிப்புகள் , கல்வி ஆலோசகர் மற்றும் திறனாய்வாள​ரான ஜெயபிரகாஷ் காந்தி
காலேஜ் கேம்பஸ்
டாப் 10 படிப்புகள்
உங்களுக்கு உதவத்தான் முக்கியமான கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள்.. என்று ஒரு குழுவே இணைந்து, ஆராய்ந்து, முத்தான இந்தப் பத்து படிப்புகளையும் வரிசைப்-படுத்தியுள்ளது.
என்ஜினீயரிங் துவங்கி பி.பி.ஏ-வில் முடிகிற அந்தத் துறைகளையும் அவற்றின் முக்கியத்-து-வத்தையும் பற்றி இங்கே விளக்கமாகச் சொல்-கிறார் சேலத்தைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் மற்றும் திறனாய்வாளரான ஜெயபிரகாஷ் காந்தி.
”பொதுவாக பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் தங்களுக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வைத்திருக்கும் அளவுகோல் மிகவும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே முடிந்து விடுகிறது. தனக்குத் தெரிந்தவர்கள் தேர்ந்தெடுத்து வெற்றி கண்ட துறையையே தனக்குமான எதிர்காலமாக நம்புவது, பெற்றோர்களின் வற்புறுத்தலின்படி ஒரு துறையைத் தேர்ந்தெடுப்பது, நண்பர்களை விட்டுப் பிரியாமல் இருக்க அனைவரும் ஒரே கோர்ஸில் சேர்வது.. என்றெல்லாம் முடிவெடுக்கவே கூடாது.
எந்தத் துறைக்கான தேவை தற்போது அதிகமாக உள்ளது, அதில் நமக்கு விருப்பம் இருக்கிறதா, அதற்கான போட்டியில் நமக்கான இடத்தை நம் மதிப்பெண்கள் நமக்கு பெற்றுத் தந்து விடுமா.. என்பவை உள்ளிட்ட செறிவான அறிவுடனும், விசாலமான பார்வையுடனும் நமக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
காரணம்.. படித்து முடிக்கும்போதே.. பல நேரங்களிலும் ‘கேம்பஸ் இன்டர்வியூ உபயத்தால் முடிக்கும் முன்னரே.. பல ஆயிரங்கள் சம்பளத்தோடு உடனடி வேலை.. சில வருடங்களிலேயே லட்சத்தை தொடும் அளவுக்கு சம்பள உயர்வு.. வெளிநாட்டு வேலை வாய்ப்பு.. என இத்துறையில் பெருகிக் கொண்டே இருக்கும் தேவைகள்தான்!
பி.இ படிப்பைப் பொறுத்தவரை உங்களின் கட் ஆஃப் மார்க் 180-க்கு மேலே இருந்தால், கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுத்து கோர்ஸை தேர்ந்தெடுங்கள். அதற்குக் கீழ் என்றால், கோர்ஸூக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்லூரியை தேர்ந்தெடுங்கள்.
காலத்துக்கேற்ப அத்தனை புதிய மாற்றங்களையும் வாரி எடுத்து வளர்ந்து வரும் பொறியியல் கல்வியில், இப்போது இன்னும் புதுப் புதுத் துறைகள் வந்துள்ளன. வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை ஏற்கெனவே இருக்கும் துறைகளை விட, இன்று இவைதான் ‘மோஸ்ட் வான்ட்டட்’ ஆக உள்ளன.
அவை என்னென்ன என்று பார்க்கலாம்..
இதன் காரணமாக கெமிக்கல், செராமிக்ஸ், மெட்டலர்ஜி, எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என எந்தத் துறைக்கான உற்பத்தியாக இருந்தாலும், அதில் இந்தப் பொறியாளர்களுக்கான வேலை உறுதியாக இருக்கிறது. பொறியியல் படிப்புகளிலேயே எந்தத் துறையில் வேண்டுமானாலும் பணியாற்ற முடிகிற ஒரே படிப்பு இதுதான்.
சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தப் படிப்பு உள்ளது. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் இந்தப் படிப்புக்கு மாணவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.
என்.ஐ.எஸ்.ஈ.ஆர்., தன் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் மூவாயிரத்தை ஸ்காலர்ஷிப்-பாக வழங்கி ஊக்குவிக்கிறது.
கிட்டத்தட்ட இருபத்தோராம் நூற்றாண்டு அறிவியல் யுகத்தின் அத்தனை புதிய அம்சங்களையும் பயிலக் கொடுக்கும் இந்த கோர்ஸில், முதல் இரண்டு செமஸ்டர்களுக்கு அடிப்படை பாடங்களும், மூன்றாவது செமஸ்டரில் இருந்து ஸ்பெஷலைஸ்டு பாடங்களும் கற்பிக்கப்படும். அடாமிக் எனர்ஜி பற்றிய ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையிலும், தனியார் ஆய்வு நிலையங்களிலும் இதற்கான வேலை வாய்ப்புகள் விரிந்து கிடக்கின்றன.
இந்தப் படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வான ‘நெஸ்ட்’, ‘ஹோமி பாபா சென்டர் ஃபார் சயின்ஸ் எஜுகேஷன்’-ன் மேற்பார்வையில் இந்தியாவின் பல நகரங்களிலும் நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வு, பொதுப் பிரிவு, மேத்ஸ், ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் பயாலஜி என ஐந்து பாகங்களாக பிரித்து நடத்தப்படும்! வினாக்கள் ‘அப்ஜக்டிவ்’ முறையில் அமைந்திருக்கும்.
விண்வெளி ஆய்வுத் துறைகள், பாதுகாப்புத் துறைகள், அரசு, தனியார் விமான நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் படித்தவர் களுக்கான வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது.
இது சென்னை ஐ.ஐ.டி, மும்பை ஐ.ஐ.டி, கான்பூர் ஐ.ஐ.டி, கோவை, அமிர்தா யூனி வர்சிட்டி மற்றும் சென்னை, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் போன்றவற்றில் உள்ளது. இங்கெல்லாம் இதற்கான சிறப்பு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்கின்றனர்.
பயோ சென்ஸார்ஸ், எலெக்ட்ரோ கெமிக்கல் சென்ஸார்ஸ், எரிபொருட்கள் மற்றும் பேட்டரி உற்பத்தி போன்ற சிறப்பு மிக்க துறைகளில் எலெக்ட்ரோ கெமிக்கல் என்ஜினீயர்களுக்-கான வேலை வாய்ப்புகள் உள்ளன.
இந்தக் கல்வி காரைக்குடியில் உள்ள ‘சிக்ரி’ (சி.இ.சி.ஆர்.ஐ – சென்ரல் எலெக்ட்ரோகெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்)-ல் மட்டுமே உள்ளது. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் இதற்கு மாணவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.
மருந்துகளை தயாரிக்கப் பயன்படுத்தும் உயிர்வேதிப் பொருட்களைப் பற்றி படிக்கும் இந்த பார்மாஸ¨ட்டிகல் என்ஜினீயரிங், ஒரு தனித்துவமான பாடப்பிரிவாகவே கருதப்படு-கிறது.
புதிய புதிய மருந்துகள் நாள்தோறும் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருந்தாலும், அவற்றுக்கான தேவை அதை விட அதிகமாகவே இருப்பது நிதர்சனம். எனவேதான் இந்தப் படிப்புக்கான வேலைவாய்ப்புகளும் நிறைய இருக்கிறது.
தமிழ்நாட்டில் இந்தப் பாடப்பிரிவை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஏ.சி. காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி, அண்ணா யூனிவர்சிட்டி ஆகியவை வழங்குகின்றன.
வேதியியல் தொழிற்சாலைகள், தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகளில் இதற்கான வேலை வாய்ப்பு நிறையவே உள்ளது. ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் இப்போது இந்தத் துறையில் கால் பதித்திருப்பது, இதற்கான எதிர்கால தேவையை உறுதி செய்கிறது.
திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், சென்னை, திருச்சி, அண்ணா பல்கலைக்கழகம் போன்றவற்றில் இதற்கான கோர்ஸ்கள் உள்ளன. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படு-வார்கள்.
இப்போது மருத்துவமனைகளில் நாம் பார்க்கிற எம்.ஆர்.ஐ. மற்றும் ஈ.சி.ஜி. உபகரணங்கள், நோய் கண்டறியும் மருத்துவ மெஷின்கள் முதலியவை இந்தத் தொழில் நுட்பத்தினால் உருவாக்கப்பட்டவையே.
இப்படியான கருவிகளை கட்டமைப்பது, அவற்றை மருத்துவமனைகளில் நிறுவுவது, அதன் கட்டுப்பாடு, பாதுகாப்பு உள்ளிட்ட பொறுப்புகள் அடங்கியது இதற்கான வேலைவாய்ப்பு. நாளுக்கு நாள் புதிய முயற்சிகள் புகுத்தப்படும் மருத்துவத் துறையில் இந்தப் படிப்பை முடித்த வர்களுக்கான தேவையும் பெருகிக் கொண்டே செல்கிறது.
தற்போது தமிழ்நாட்டில் பதினான்கு தனியார் பொறியியல் கல்லூரிகளில் அளிக்கப்படும் இந்தப் படிப்புக்கு தமிழ்நாடு பொது கவுன்ஸிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
என்ஜினீயரிங் மேத்ஸ், மெக்கானிக்ஸ், மெஷின் காம்போனென்ட் டிசைன், தெர்மோ டைனமிக்ஸ், பவர் என்ஜினீயரிங், ரோபோடிக்ஸ் போன்ற பாடப்பிரிவுகள் அடங்கிய இந்தப் படிப்பு, கோவையில் உள்ள குமரகுரு மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ஈரோட்டில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரி, திருச்செங்கோட்டில் உள்ள கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் அவினாசி-யிலுள்ள மஹாராஜா பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் வழங்கப்படுகிறது.
அண்ணா யூனிவர்சிட்டியின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலமும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அவர்களால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு மூலமும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
ஆண், பெண் என இரு பாலருக்குமான இந்தப் படிப்பு, கேரளாவில் உள்ள கொச்சின் யூனிவர்சிட்டி ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்-னாலஜி, விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா யூனிவர்சிட்டி உள்ளிட்ட பல கல்லூரி-களில் உள்ளது. அந்தந்த கல்வி நிறுவனங்கள் சேர்க்கைக்-கான நுழைவுத் தேர்வினை நடத்து-கின்றன.
இதன் மூலம் விவசாயிகளின் பிரச்னைகளுக்-கும் ஆய்வாளர்களின் தேடல்களுக்கும் தீர்வு எடுக்க திட்டங்கள் முடுக்கப்படும். மாணவர்-களை இதற்காக தயார்படுத்தும் படிப்புதான் ‘பி.டெக். அக்ரிகல்ச்சர் இன்ஃபர்மேஷன் டெக்னா-லஜி’. நாட்டில் எழுபது சதவிகிதம் வரை உள்ள விவசாய சமுதாயத்துக்கு இனி வரும் நாட்களில் இன்னும் தனி கவனம் தரப்படும் என்பதால், இதற்கான வேலை வாய்ப்புக்கும் அதிக நம்பிக்கை உள்ளது.
அக்ரிகல்ச்சுரல் இன்ஃபர்மேஷன் சிஸ்டம், டெவலப்மென்ட்டல் எகனாமிக்ஸ், மல்டிமீடியா டெக்னாலஜி, ஃபார்ம் ஆட்டோமேஷன், ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ் போன்ற பாடப் பிரிவுகள் உள்ளடங்கிய இந்தப் படிப்பை இந்தியாவிலேயே முதல் முறையாக சென்ற வருடத்தில் இருந்து கோவை, தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் அளிக்கிறது. இதற்காக தனியாக இந்த பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
டாப் 10 படிப்புகள்

பொறியியல் படிப்புகளைப் போல கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் எம்.பி.பி.எஸ்-க்கு இல்லை. கட் ஆஃப் மதிப்பெண்கள் 195-க்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்கும். அதற்கு அருகில் எடுப்பவர்கள் போட்டிகளை சமாளித்து தனியார் கல்லூரிகளில் இடம் பெறுவார்கள். மெரிட் தவிர, மேனேஜ்மென்ட் மூலம் ஸீட் பெறுபவர்களும் உண்டு.
பல லட்சங்கள் வரை செல்லும் கட்டணங்கள், ஐந்து வருட படிப்பில் இறுதி வருடம் ஹவுஸ் சர்ஜன் பயிற்சி போன்றவை இதற்கான பொது விதிகள். மேற்படிப்பு படிப்பவர்களுக்கு மகப்பேறு, குழந்தை நலம், கண் மருத்துவம் என வளமான எதிர்காலம் உண்டு என்பது கண்கூடு.
”நமது நாட்டில் பல் மருத்துவர்களுக்கான முக்கியத்துவமும் தேவையும் அதிகமாகி வருகிறது” என்று மத்திய சுகாகாரத்துறை அமைச்சர் அன்புமணிகூட சமீபத்தில் கூறியிருக்கிறார். உலக சுகாதார அமைப்பும் உலகளவில் பல் மருத்துவர்களுக்கு நிலவும் பற்றாக்குறையை அறிவுறுத்தியுள்ளது.
இதற்கான முக்கியத்துவம் கொடுத்து, கிராமங்கள் வரை பல் மருத்துவ வசதியை எடுத்துச் செல்வது, இந்தத் துறையில் இன்னும் தேவையான விழிப்பு உணர்வைப் புகுத்துவது போன்ற திட்டங்களுக்கான ஆலோசனை களிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
படிப்பை முடித்த கையோடு வங்கியில் கடன் உதவி பெற்று, தேவையான இடவசதி, மருத்துவ உபகரணங்களுடன் கிளினிக்கை ஆரம்பித்து விடலாம். இதில் மேற்படிப்பான எம்.டி.எஸ் படித்தால், இன்னும் சிறப்பு.
மூன்று வருடப் படிப்பான இதில், நர்ஸிங்கை முடித்துவிட்டு, அதன் பின் சிறப்புப் படிப்புகளான ‘நியூரோ நர்ஸிங்’, ‘போஸ்ட் ஆபரேட்டிவ் நர்ஸிங்’ போன்றவற்றை எடுத்துப் படிக்கிறவர்களுக்கு, அதற்கான அங்கீகாரமும் தேவையும் கூடுகிறது. நர்ஸிங் படிப்புகளுக்கு வெளிநாடுகளிலும் மிகச் சிறந்த வேலை வாய்ப்பு உள்ளது.
தனியார் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வின் மூலமும், அரசு கல்லூரிகளில் செவிலியர் படிப்புக்கான தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலமும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நர்ஸிங்கில் டிப்ளமோ படிப்புகளும் பரவலாக வந்து விட்டன. இவற்றை முடித்து வேலையில் சேரும் பெண்கள் அதோடு தேங்கி விடாமல், வேலையில் இருந்து கொண்டே மேற்படிப்பையும் முடித்தால், நல்ல எதிர்காலம் உண்டு

படிப்புடன் கூடவே கற்பனைத்திறன், உலக நடப்பு அறிவு, ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு இதில் அதிக வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.
பத்திரிகை நிருபர், வானொலி நிலைய இயக்குநர், தொலைக்காட்சி செய்தி சேகரிப்பாளர், சினிமா ஒளிப்பதிவாளர், இயக்குநர், எடிட்டர், விளம்பரப்பட இயக்குநர், அனிமேஷன் உள்ளிட்ட பலப் பல வேலைகள் இந்தத் துறை-யில் விரிந்து உள்ளன.
பி.எஸ்சி., விஸ்காம் பி.எஸ்சி., எலெக்ட்ரானிக் மீடியா மற்றும் பி.ஏ., ஜர்னலிஸம் பாடப்பிரிவுகள் பல கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ளது. இதற்கு பன்னிரண்டாம் வகுப்பில் எந்தப் பாடத்தை படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ஹோட்டல்களில், பி.ஆர்.ஓ., நிர்வாகம் ஆகியவற்றில் வேலை வாய்ப்பு தரும் ‘ஃப்ரன்ட் ஆபீஸ்’ பாடப் பிரிவுகள், பராமரிப்பில் வேலை வாய்ப்பு தரும் ‘ஹவுஸ் கீப்பிங்’ பாடப் பிரிவுகள், உணவு உற்பத்தியில் வேலை வாய்ப்பு தரும் ‘குக் புரொடக்ஷன்’ பாடப் பிரிவுகள்.. என இதன் பாடத் திட்டமே வேலை வாய்ப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது ஹோட்டல், ரெஸ்ட்டாரன்ட், ஃபாஸ்ட் ஃபுட், காஃபி ஷாப், மோட்டல் என பல பெயர்களில் பெருகி வரும் இந்த முதல் தர உணவகங்களில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புகள் நிரம்பி உள்ளன.
ப்ளஸ் டூ-வில் எந்தப் பாடத்தை எடுத்துப் படித்திருந்தாலும் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். கல்வி நிறுவனங்களுக்கு ஏற்ப மூன்று வருடங்கள், நான்கு வருடங்கள் என கால அளவு மாறுபடும். இந்தப் படிப்பில் செறிவான ஆங்கில அறிவோடு இந்தி, ஜெர்மன், பிரெஞ்சு என வேற்று மொழி அறிவும் இருந்தால் மிக அதிக சம்பளத்தில் வேலையில் அமர முடியும்.
குறிப்பாக, பெங்களூரு, மும்பை போன்ற இந்தியாவின் மெட்ரோபாலிட்டன் நகரங்களிலும் வெளிநாடுகளில் உள்ள பெரிய ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களிலும் முன்னுரிமை கொடுத்து பணியமர்த்தப் படுவார்கள்.
மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் வரும் சென்னை, தரமணி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் அரசால் நடத்தப்படும் ‘ஹோட்டல் மேனேஜ்மென்ட் கோர்ஸ்’கள் உள்ளன. இதற்கு ‘ஆல்இண்டியா ஹோட்டல் மேனேஜ்மென்ட்’டால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
மற்ற தனியார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிலையங்-களில் பன்னிரண்டாம் வகுப்பின் பொதுத் தேர்வு மதிப்-பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
சென்னையில் உள்ள ஆசான் மெமோரியல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், சேலத்தில் உள்ள சேர்வராய்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முதலிய பல கல்வி நிலையங்களில் இந்தப் பாடப்பிரிவு உள்ளது.

ஃபேஷன் டெக்னாலஜி படிப்புக்கு பன்னிரண்-டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களைப் படித்திருக்க வேண்டும். இது கல்வி நிலையங்களைப் பொறுத்து மூன்று, நான்கு கால ஆண்டு படிப்பாக வழங்கப்படுகிறது.
ஃபேஷன் டெக்னாலஜி படித்தவர்களுக்கு இந்திய தொழில் துறைகளில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜவுளித் துறையில் அதிக அளவுல் வேலை வாய்ப்புகள் உள்ளன. தவிரவும், இந்திய ஆடைகளுக்கு உலகளவில் இருக்கும் வரவேற்பால் இவர்களுக்கு ஏற்றுமதி துறையிலும் வரவேற்பு உள்ளது.
ஃபேஷன் டிசைனிங்கில் பன்னிரண்டாம் வகுப்பில் எந்தப் பாடத்தைப் படித்தவர்களும் சேரலாம். இது இளங்கலை, டிப்ளமா படிப்பாக வழங்கப்படுகிறது. இதில் இமேஜ் கல்சல்ட்டன்ட், ஃபேஷன் டிசைனர், ஃபேஷன் கோ-ஆர்டினேட்டர் உள்ளிட்ட பல வேலை வாய்ப்புகள் உள்ளன.
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘நிஃப்ட்’ (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி), உலகளவில் ஃபேஷன் டெக்னாலஜி மற்றும் ஃபேஷன் டிசைனிங் படிப்புகளை வழங்கும் முன்னணி கல்வி நிலையங்களில் ஒன்று. சென்னை, பெங்களூரு, குஜராத்தின் காந்திநகர், கொல்கத்தா, மும்பை, புதுடெல்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இந்த கல்வி நிலையம் உள்ளது.
முக்கியமான விஷயம்.. இங்கெல்லாம் பொதுத் தேர்வு மதிப்பெண்களை விட அவர்களால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதில் வெற்றி பெற்று அங்கு சேர்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு.
நிஃப்ட்டின் கட்டுப்பாட்டின் கீழ் திருப்பூரில் இயக்கும் ‘நிஃப்ட் – டி.ஈ.ஏ.’ கல்வி நிலையத்-திலும் ஃபேஷன் டிசைனிங் மூன்று ஆண்டுகளுக்கான டிப்ளமா கோர்ஸாக நடத்தப்படுகிறது.
நிஃப்ட் தவிரவும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ்கள் உள்ளன. கல்வி நிறுவனங்களுக்கு ஏற்ப பாடத் திட்டங்கள் வேறுபடும் என்பதால், அரசு அங்கீகாரம் பெற்ற தரமான கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.
டாப் 10 படிப்புகள்
இவ்வாறு பணியில் சேர்ந்த பிறகோ, முன்னரோ தொடந்து இளங்கலை, முதுகலை படிப்பது, மேல்நிலைப் பள்ளி ஆசிரியையாக அவர்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும். டியூஷன் சென்டர் துவங்குவதன் மூலம் உடனடி வேலை வாய்ப்பைப் பெறலாம்.
சென்னை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட பல நகரங்களிலும் அரசு ஆசிரியர் பயிற்சி நிலையங்கள் உள்ளன. தவிரவும் அரசு அங்கீகாரம் பெற்ற பல தனியார் பயிற்சி நிறுவனங்களிலும் இந்தக் கல்வி உள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இதற்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.
டாப் 10 படிப்புகள்
நீதிமன்றங்களில் பணிபுரிவதைத் தவிரவும், இப்போது இந்தத் துறையில் இன்னும் பல வேலை வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. பி.எல்., முடித்தவர்களை தங்களுக்கான சட்ட ரீதியான ஆலோசனைகள் வழங்கும் ‘சட்ட ஆலோசகர்களா’க (லீகல் அட்வைஸர்கள்) பணியமர்த்திக் கொள்வதில் பல முன்னணி நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன.
இது தவிர பி.எல் படிப்புக்குப் பிறகு ஏ.சி.எஸ் (அசோசியேட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரி) கோர்ஸை படிப்பதன் மூலம், கம்பெனிகளுக்கென்று உள்ள சிறப்பு சட்டங்களைப் படித்து, அதற்கான வேலையில் அமர முடியும். இந்த ஏ.சி.எஸ் படிப்பில் பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகும் சேர முடியும் என்றாலும், சட்டப் படிப்பை முடித்து விட்டு இந்த கோர்ஸை படித்தால் இதற்கான மரியாதை அதிகம்.
டெல்லியை தலைமையகமாகக் கொண்ட அமைப்பான ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்கரட்டரிஸ் ஆஃப் இந்தியா’வின் கிளைகள் நம் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோவையில் உள்ளன. பிளஸ் டூ மற்றும் சட்டம் முடித்தவர்கள், இங்கு விண்ணப்பித்து, இந்தப் படிப்பில் சேரலாம்.
ஐந்தாண்டுப் படிப்பான பி.எல்&க்கு சட்டப் படிப்புக்கான ‘தமிழ்நாடு பொது கவுன்சிலிங்’ மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
சென்னை, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளிலும், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியிலும் சட்டப் படிப்பு உள்ளது.

வணிகவியல் தொடர்பான படிப்புகளுக்கு அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்-களிலும் இருக்கும் தேவையே இதற்குக் காரணம். பி.காம், பி.பி.ஏ., முடித்துவிட்டு உடனே வேலை தேடுவதைவிட, படிக்கும்போதே சி.ஏ. (சார்டர்டு அக்கவுன்டன்ட்), காஸ்ட் அக்கவுன்ட்ஸ், கம்பெனி செக்ரட்டரிஷிப் போன்ற வணிகவியல் தொடர்பான படிப்புகளைப் படிப்பது, வேலை வாய்ப்புகளை எளிதில் வசப்படுத்தும்.
இன்று இந்தப் படிப்புகளில் சேரும் பலரும், மேற்படிப்பாக எம்.பி.ஏ அல்லது எம்.சி.ஏ., படிக்கும் எண்ணத்தோடுதான் சேருகிறார்கள். அந்த கணிப்பு சரிதான். அதிலும் எம்.பி.ஏ.,வில் ரீடெயில் மேனேஜ்மென்ட், ஃபார்மா மேனேஜ் மென்ட், ஹாஸ்பிட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் போன்ற சிறப்புப் பிரிவுகளை தேர்ந்தெடுத்துப் படிக்கும்போது, அதற்கான வேலை வாய்ப்பும் கூடுகிறது.
அரசு, தனியார் கல்லூரிகளில் வழங்கப்படும் இந்தக் கல்விக்கு, அந்தந்தக் கல்வி நிலையங்-களுக்கு விண்ணப்பிக்க, மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
பி.ஏ., ஆங்கிலம்: ஆங்கில இலக்கியம் படிப்பவர்களுக்குத்தான் இப்பொழுது பி.பி.ஓ (பிஸினஸ் பிராசஸ் அவுட்ஸோர்ஸிங்) துறையிலும், மொழிபெயர்ப்பு துறையிலும் வேலை வாய்ப்புகள் விரிந்து கிடக்கின்றன. கூடவே, கைக்கடிகாரம் முதல் கணினி வரை மார்க்கெட்டில் விற்பனையாகும் பொருட்களை உபயோகிப்பது பற்றிய குறிப்புகள் அடங்கிய ‘பிரவுச்சர்’களுக்கு எழுத்தாக்கம் கொடுக்கவும் (டெக்னிகல் ரைட்டிங்), வெப் டிசைன் துறைகளில் எழுத்து சம்பந்தப்பட்ட வேலைகளிலும் ஆங்கில இலக்கியம் முடித்தவர்களின் தேவையே அதிகம் நாடப்படுகிறது.
எனவே நல்ல ஆங்கில அறிவு அமையப் பெற்றிருக்கும் பி.ஏ., ஆங்கில இலக்கிய மாணவர்களுக்கு, சிறப்பான எதிர்காலம் உள்ளது.
அதனால், இந்த இரு துறைகளுக்குமான முக்கியத்துவமும் அதிகரித்துள்ளது.
ஜூஸில் இருந்து ரெடிமேட் மாவு வரை சந்தையில் கொட்டிக் கிடக்கும் உணவுப் பொருட்களே இவற்றுக்கான வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்துகின்றன.
இவை தவிர ஆய்வகங்களிலும் மருத்துவமனைகளிலும் இந்தப் படிப்பை முடித்தவர்களுக்கான தேவை உள்ளது.
மேற்சொன்ன இரண்டு படிப்புகளிலும், எம்.எஸ்சி படிப்பதை விடவும், மெடிக்கல் மைக்ரோ பயாலஜி, மெடிக்கல் பயோடெக்னாலஜி.. என்று மருத்துவம் தொடர்பான மேற்படிப்புகளை படித்தால், மருத்துவம், பல் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு விரிவுரையாளராகவும் பணியாற்றலாம். இதற்கு தற்போது அதிக தேவை இருக்கிறது.
பயோ டெக்னாலஜியும் மைக்ரோபயாலஜியும் தமிழகத்தின் பல கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இதற்கு பன்னிரண்டாம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவர, விலங்கியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H