பத்தாம் வகுப்பில் செய்முறை தேர்வுக்கு வராதவர்களுக்கு அறிவியல் பொதுத்தேர்வு எழுத அனுமதி இல்லை' என தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து
வருகிறது. தமிழ் மற்றும் பிறமொழி பாடங்களுக்கான தேர்வுமுடிந்துள்ளது. 22ம்
தேதி ஆங்கிலத்தேர்வு துவங்குகிறது; ஏப்ரல் 7ல் அறிவியல் தேர்வு நடக்க
உள்ளது.
இந்நிலையில் அனைத்து பள்ளிகளுக்கும் அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர் அமுத
வல்லி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில், '10ம் வகுப்பு அறிவியல்
தேர்வு எழுத வரும் மாணவர் அல்லது தனித்தேர்வர் யாராக இருந்தாலும் செய்முறை
தேர்வை எழுதியிருக்க வேண்டும். இல்லையெனில் அவர்களை அனுமதிக்க வேண்டாம்.
'தியரி' எனப்படும் கருத்தியல் தேர்வு மட்டும் தேர்ச்சிக்கான கணக்கில்
எடுத்து கொள்ளப்படாது என, ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்' என
தெரிவித்துள்ளார்.