தற்போது
நாட்டில், வேலை பார்க்கும் வயதில் உள்ளவர்களில், 50 சதவீதத்துக்கும்
குறைவானவர்களுக்கே வேலை கிடைக்கிறது; அடுத்த, 35 ஆண்டுகளில், இது மேலும்
குறைந்து, வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும்' என,
எச்சரிக்கப்பட்டுள்ளது.
யு.என்.டி.பி., எனப்படும் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம் வெளியிட்டுள்ள, ஆசிய பசிபிக் மனிதவள மேம்பாட்டு அறிக்கையில்
கூறப்பட்டுள்ளதாவது:* கடந்த, 1991 முதல்,
2013ம் ஆண்டு வரை எடுக்கப்பட்டுள்ள கணக்கின்படி, இந்தியாவில் வேலை பார்க்கும் வயதை எட்டிய, 30 கோடி பேரில், 14 கோடி பேருக்கு மட்டுமே வேலைகிடைத்துள்ளது
* தற்போது சராசரியாக, ஒரு மாதத்துக்கு, 10 லட்சம் பேர் வேலையில் சேருகின்றனர்
* வேலை பார்க்கக் கூடிய வயது பிரிவில் உள்ளவர்களில், மூன்று கோடி பேர், மேல்படிப்பு படிக்கின்றனர்
* வரும், 2050ல், மேலும், 28 கோடி பேர், வேலை பார்க்கும் வயது பிரிவை எட்டுவர்
* மக்கள்தொகை அதிகமாக உள்ள இந்தியாவில், அதிக அளவு மக்கள் கிராமங்களில்இருந்து நகரங்களுக்கு குடிபெயர்ந்து வரும் நிலையில், அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், உற்பத்தி துறைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்
* சீனாவில், உற்பத்தி துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் தான், அங்கு, ஏழ்மை குறைந்துள்ளது
2013ம் ஆண்டு வரை எடுக்கப்பட்டுள்ள கணக்கின்படி, இந்தியாவில் வேலை பார்க்கும் வயதை எட்டிய, 30 கோடி பேரில், 14 கோடி பேருக்கு மட்டுமே வேலைகிடைத்துள்ளது
* தற்போது சராசரியாக, ஒரு மாதத்துக்கு, 10 லட்சம் பேர் வேலையில் சேருகின்றனர்
* வேலை பார்க்கக் கூடிய வயது பிரிவில் உள்ளவர்களில், மூன்று கோடி பேர், மேல்படிப்பு படிக்கின்றனர்
* வரும், 2050ல், மேலும், 28 கோடி பேர், வேலை பார்க்கும் வயது பிரிவை எட்டுவர்
* மக்கள்தொகை அதிகமாக உள்ள இந்தியாவில், அதிக அளவு மக்கள் கிராமங்களில்இருந்து நகரங்களுக்கு குடிபெயர்ந்து வரும் நிலையில், அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், உற்பத்தி துறைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்
* சீனாவில், உற்பத்தி துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் தான், அங்கு, ஏழ்மை குறைந்துள்ளது
* இந்தியாவில், உற்பத்தி துறையின் பங்கு, நாட்டின் மொத்த உள்நாட்டு
உற்பத்தியில், 15 சதவீதம் மற்றும் வேலைவாய்ப்பில், 11 சதவீதமாக மட்டுமே
உள்ளது
* உற்பத்தி துறையில் அதிக வளர்ச்சியை அடைந்தால் தான், எதிர்காலத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க முடியும்.
* உற்பத்தி துறையில் அதிக வளர்ச்சியை அடைந்தால் தான், எதிர்காலத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க முடியும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...